search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினியும் கமலும் சினிமா புகழை வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது- ஈஸ்வரன் தாக்கு
    X

    ரஜினியும் கமலும் சினிமா புகழை வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது- ஈஸ்வரன் தாக்கு

    ரஜினியும், கமல்ஹாசனும் சினிமாப் புகழை வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளிக்கு அபாயகரமான பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. அந்த மாதிரியான பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று கூறியதற்கு பதிலாக அந்த மாதிரி பட்டாசுகளை தயாரிக்க அரசு தடை விதிக்க வேண்டும்.

    பட்டாசு வெடிக்க நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழக அரசு நேரம் ஒதுக்கியுள்ளது. இது எப்படி நடைமுறைக்கு சாத்தியம் ஆகும்? தீபாவளி பண்டிகை என்றாலே அது குழந்தைகளுக்கான பண்டிகைதான். காலங்காலமாக தீபாவளி பண்டிகை முழுவதும் குழந்தைகள் தங்கள் விரும்பிய பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.


    இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காலையில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    இதை எப்படி குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க முடியும்.? பட்டாசு மாசு என்று கூறுபவர்கள் வாகனங்களால் ஏற்படும் மாசு, சாயக் கழிவுகளால் ஏற்படும் மாசுகளும் பற்றி ஏன் பேசுவதில்லை?

    மேலும் குறிப்பிட்ட நேரம் போக பட்டாசு வெடிக்கும் ஒவ்வொரு வீட்டையும் போலீசார் சென்று ஆய்வு நடத்த முடியுமா? பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை வெளியுலகத்துக்கு சொல்லுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதேசமயம் தங்கள் சுய விருப்பதற்காக ஒருவர் மீது பொய்யாக புகார் தெரிவிக்க கூடாது.

    ரஜினியும், கமல்ஹாசனும் சினிமாப் புகழை வைத்து தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது, ஜெயிக்க முடியாது, அவர்கள் நிச்சயமாக தேர்தல் சமயத்தில் கூட்டணி வைப்பார்கள். அவர்கள் கூட்டணி வைத்தால் ஏமாந்துதான் போவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    Next Story
    ×