search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தல் வந்தால் 20 தொகுதிகளில் நிச்சயம் போட்டியிடுவோம் - கமல்ஹாசன்
    X

    இடைத்தேர்தல் வந்தால் 20 தொகுதிகளில் நிச்சயம் போட்டியிடுவோம் - கமல்ஹாசன்

    தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ByElection
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று மாலை நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-



    இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சேவை நான் வரவேற்கவில்லை. இருந்தாலும் முன்பு போல அவர் செயல்படமாட்டார் என நம்புகிறேன். மற்ற நாட்டு அரசியல் விவகாரத்தில் நாம் குறுக்கீடு செய்ய கூடாது. இருந்தாலும் முன்பு செய்ததை தற்போதும் செய்வார்கள் என எண்ண வேண்டாம். தமிழர்களுக்கு நல்லது பண்ணமாட்டார் என நாம் நினைக்கவேண்டாம். தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #ByElection #MakkalNeedhiMaiam

    Next Story
    ×