search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறுகிறார்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறுகிறார்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Edappadipalaniswami #ADMK #MKStalin #DMK

    சேலம்:

    சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி: சபரிமலைக்கு பெண்கள் செல்வது எல்லாம் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உங்களது கருத்து?

    பதில்: இது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு. இதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

    கே:மத்திய உள்துறை அமைச்சகம் கேரளாவில் சபரிமலை பிரச்சனை தொடர்பாக, கர்நாடகம், தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த அறிக்கை அனுப்பி உள்ளது குறித்து?

    ப:தமிழ்நாட்டில் பாதுகாப்பு முன்எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசாரும் உஷார் நிலையில் உள்ளனர்.

    கே: அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளார்களே?

    ப: அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கின்றது.அவர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகள் எல்லாம் அரசு அதற்கென்று ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே அம்மாவுடைய அரசை பொறுத்தவரைக்கும் அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.


    7-வது ஊதிய குழு அறிவிக்கப்பட்டு அதில் எந்த அளவுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது உங்கள் ஊடகத்தின் வாயிலாகவே ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

    அரசை பொறுத்தவரைக்கும் நிதிநிலை பார்த்துதான் அந்த நிதிநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வைத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்ற முடியும்.

    நிதி ஆதாரம் இல்லை. நிதி ஆதாரம் இருந்தால் தான் எல்லாமே கொடுக்க முடியும். நிதி ஆதாரம் தானே முக்கியம். தமிழகத்தினுடைய நிதி ஆதாரம் எந்த அளவிற்கு உள்ளது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

    அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது முறைப்படி அவர்களுக்கு தக்க உதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    அரசாங்கத்திற்கு எவ்வளவு நிதி சுமை இருக்கின்றது அனைவருக்கும் தெரியும். அதுவும் அரசு ஊழியர்களுக்கு முழுமுழுக்க தெரியும். ஏனேன்றால் அரசாங்கத்தை நடத்தக் கூடிய ஒரு நிலையிலேயே இருக்கக் கூடியவர்கள் அரசு ஊழியர்கள். அரசாங்கத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கின்றது என்பது அவர்களுக்கு தெரியும். அதற்கு ஏற்றவாறு அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.

    தமிழகம் முழுவதும் பருவமழை பெய்த காரணத்தினால் ஆங்காங்கே தேங்கி இருக்கின்ற தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி டெங்கு கொசு உற்பத்தியாகாத அளவிற்கு மருந்து தெளித்து முன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் இதற்கு பொதுமக்கன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ஒட்டன் சத்திரம், தாராபுரம், அவினாசி சாலைகளை டெண்டர் உறவினர்களுக்கு கொடுத்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு. ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள், நெருங்கிய உறவினர்கள் யார்? யார்? என்பது குறித்து தி.மு.க. ஆட்சி காலத்தில் அறிவித்திருக்கிறார்கள். இதில் எதுவுமே டெண்டர் கொடுக்கப்பட்டதில் வரவில்லை. அப்படி வராமல் இருக்கும்போது சொந்தக்காரர்களுக்கு கொடுத்து விட்டேன் என்று கூறினால் இதை எப்படி சொல்லுறது. இதை பத்திரிக்கையாளர்கள் தான் கேட்க வேண்டும். நான் பல முறை இது குறித்து விளக்கி விட்டேன்.

    ஆகவே ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு தகுதி இல்லாமல் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஒரு எதிர்க்கட்சி தலைவர் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலேயே ஒரு தவறான செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருந்தார் என்றால் அந்த எதிர்க்கட்சி தலைவருக்கு, அந்த பதவிக்கு லாயக்கு இல்லை. இப்படித்தான் நானும் கருதுகிறேன். மக்களும் கருதுகிறார்கள்.

    டெண்டர் விடப்பட்டதில் தவறு இல்லை என்று பல முறை சொல்லிவிட்டேன். டெண்டர் விடுவதில் யாரும் முறைகேட்டில் ஈடுபடுவதில் வாய்ப்பே கிடையாது.

    இந்த டெண்டர் பொறுத்தவரைக்கும் ஆன்லைன் டெண்டர். இந்தியாவுக்குள் எங்கிருந்தாலும் பதிவு செய்யலாம். வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும் பதிவு செய்யலாம். தகுதியானவர்கள் யார் வேண்டுமானலும் கலந்து கொள்ளலாம். முதல்-முதலாக ஆன்லைனின் பணம் கட்டும் முறையை கொண்டு வந்துள்ளோம். டெண்டர் போட்டு இருப்பவருக்கு மட்டும் தான் இது தெரியும். வேறு யாருக்கும் இது தெரியாது. அப்படி இருக்கும்போது எப்படி முறைகேடு நடைபெற்றிருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Edappadipalaniswami #ADMK #MKStalin #DMK

    Next Story
    ×