என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய 10-ம் வகுப்பு மாணவர்
Byமாலை மலர்4 Oct 2018 12:09 PM GMT (Updated: 4 Oct 2018 12:09 PM GMT)
கீரிப்பாறை அருகே இளம்பெண்ணை 10-ம் வகுப்பு மாணவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
கீரிப்பாறை அருகே உள்ள மலைக்கிராம பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.
அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் குடும்ப விவரங்களை டாக்டர்கள் விசாரித்தனர்.
அப்போது அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற தகவல் தெரியவந்தது. திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆனதால் அந்த பெண் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சிகிச்சை பெற வந்ததும் தெரியவந்தது. அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் இதுபற்றி கீரிப்பாறை போலீசாருக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.
கீரிப்பாறை போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயதான 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறியதால் அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பிணியானார்.
8 மாதம் ஆனதால் இனி மேலும் அதனை மறைக்க முடியாது என்பதால் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த பெண் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய அந்த மாணவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில் அந்த இளம்பெண் மீதே நடவடிக்கை பாயும் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
கீரிப்பாறை அருகே உள்ள மலைக்கிராம பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.
அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் குடும்ப விவரங்களை டாக்டர்கள் விசாரித்தனர்.
அப்போது அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற தகவல் தெரியவந்தது. திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆனதால் அந்த பெண் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சிகிச்சை பெற வந்ததும் தெரியவந்தது. அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் இதுபற்றி கீரிப்பாறை போலீசாருக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.
கீரிப்பாறை போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயதான 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறியதால் அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பிணியானார்.
8 மாதம் ஆனதால் இனி மேலும் அதனை மறைக்க முடியாது என்பதால் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த பெண் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய அந்த மாணவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில் அந்த இளம்பெண் மீதே நடவடிக்கை பாயும் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X