search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கண்டன பொதுக்கூட்டம் - திமுக அறிவிப்பு
    X

    அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கண்டன பொதுக்கூட்டம் - திமுக அறிவிப்பு

    அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. #DMKProtest
    சென்னை:

    தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக அரசை கண்டித்து அடுத்த மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:



    அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும்.

    பூந்தமல்லியில் நடைபெறவுள்ள கண்டன கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் பேசுகிறார். திருத்தணியில் டி.ஆர்.பாலுவும், மதுரையில் திருச்சி சிவாவும், ஒட்டன்சத்திரத்தில் ஆ.ராசாவும், திருச்சியில் பொன்முடி ஆகியோரும் பேசுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #DMKProtest
    Next Story
    ×