என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் கேள்வி கேட்க தகுதியற்ற கட்சி திமுக- பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு
Byமாலை மலர்14 Sep 2018 11:43 AM GMT (Updated: 14 Sep 2018 11:43 AM GMT)
தமிழகத்தில் கேள்வி கேட்க தகுதியற்ற கட்சி ஒன்று உண்டு என்றால் அது தி.மு.க. தான் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #PonRadhakrishnan #DMK
சுரண்டை:
சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால் மட்டுமே இன்றும் தமிழகம் பயன் பெற்று வருகிறதே தவிர 50 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளால் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை. காமராஜரால் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்று மூடப்பட்டு வருகின்றன.
ஒரு நாட்டை, மாநிலத்தை முன்னேற்ற எத்தனை நாட்கள், ஆண்டுகள், மாதங்கள் தேவை என அரசியல்வாதிகளிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதிலை வைத்து எடை போட முடியும். தமிழகத்தில் கேள்வி கேட்க அருகதை அற்ற கட்சி ஒன்று உண்டு என்றால் அது தி.மு.க. தான்.
இதனால் நாட்டில் 4 வருடத்தில் 32 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.62 ஆயிரம் கோடி வங்கியில் போடப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் தொழில் தொடங்கும் நம்பிக்கை தந்துள்ளார் மோடி. அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #BJP #PonRadhakrishnan #DMK
சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால் மட்டுமே இன்றும் தமிழகம் பயன் பெற்று வருகிறதே தவிர 50 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளால் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை. காமராஜரால் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்று மூடப்பட்டு வருகின்றன.
ஒரு நாட்டை, மாநிலத்தை முன்னேற்ற எத்தனை நாட்கள், ஆண்டுகள், மாதங்கள் தேவை என அரசியல்வாதிகளிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதிலை வைத்து எடை போட முடியும். தமிழகத்தில் கேள்வி கேட்க அருகதை அற்ற கட்சி ஒன்று உண்டு என்றால் அது தி.மு.க. தான்.
ஏழைகளுக்காக வங்கிகள் செயல்பட வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் அனைத்து மக்களும் வங்கி கணக்கு தொடங்க வழிவகைகள் செய்து தரப்படும். பணம் இல்லாவிட்டாலும் வங்கி கணக்கை தொடங்குங்கள் என சொன்னவர் பிரதமர் மோடி. ஏழைகளின் நலனுக்காக 125 கோடி மக்களுக்கும் அறிமுகப்படுத்த நபர் இல்லாவிட்டாலும் வங்கி கணக்கு தொடங்க வழி வகைகள் செய்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #BJP #PonRadhakrishnan #DMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X