search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது- ப.சிதம்பரம் பேச்சு
    X

    நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது- ப.சிதம்பரம் பேச்சு

    நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுவதால் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று ப.சிதம்பரம் கூறினார். #Congress #PChidambaram #Modi BJP
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மந்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் பல்வேறு திட்டங்களால் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீட் தேர்வு, சேலம் 8 வழிச்சாலை, மீத்தேன் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது.


    தமிழகம் உள்பட நாடு முழுவதும் மோடிக்கு கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இதனால் வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Congress #PChidambaram #Modi BJP
    Next Story
    ×