என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா பரோலுக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் கையெழுத்திடாதது வேதனை- சீமான்
Byமாலை மலர்21 March 2018 5:41 AM GMT (Updated: 21 March 2018 5:41 AM GMT)
நடராஜனை பார்க்க சசிகலா பரோலுக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் கையெழுத்து போடாதது மரண வலியாக இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார். #Sasikala #Seeman
தஞ்சாவூர்:
தஞ்சையில் சசிகலா கணவர் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தஞ்சைக்கு வந்தார்.
தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடராஜன் தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய ஆளுமை. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்று கொண்டவர். அவர் இழப்பு என்பது தமிழ் சமுதாயத்திற்கு மாபெரும் ஈடுகட்ட முடியாத இழப்பு ஆகும்.
நடராஜன் உயிரோடு இருக்கும் போதே சசிகலா அவரை பார்த்திருக்க முடியும். இத்தனை அ.தி.மு.க எம்.பி.க்கள் இருந்தும், அவரது பரோலுக்கு, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட கையெழுத்து போடாதது மரண வலியாக இருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நடராஜன் மரணத்திற்கு மரியாதை செய்யும் போது தமிழக முதல்வர் அல்லது துணை முதல்வரோ ஒரு இரங்கலாவது தெரிவித்திருக்கலாம்.
மனித நேயம் அற்றவர்களுக்கு கீழே நாம் இருக்கிறோம் என்பது பெரிய அவமானமாக உள்ளது. பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று சொல்லும் ஒரு மிகப்பெரிய கூட்டத்திடம் சிக்கி கொண்டோம் என்பது பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற அரசியல் நாகரிகம், பண்பாடற்ற செயல் மரணத்தை விட கொடுமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
தஞ்சையில் சசிகலா கணவர் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தஞ்சைக்கு வந்தார்.
தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடராஜன் தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய ஆளுமை. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்று கொண்டவர். அவர் இழப்பு என்பது தமிழ் சமுதாயத்திற்கு மாபெரும் ஈடுகட்ட முடியாத இழப்பு ஆகும்.
நடராஜன் உயிரோடு இருக்கும் போதே சசிகலா அவரை பார்த்திருக்க முடியும். இத்தனை அ.தி.மு.க எம்.பி.க்கள் இருந்தும், அவரது பரோலுக்கு, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட கையெழுத்து போடாதது மரண வலியாக இருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நடராஜன் மரணத்திற்கு மரியாதை செய்யும் போது தமிழக முதல்வர் அல்லது துணை முதல்வரோ ஒரு இரங்கலாவது தெரிவித்திருக்கலாம்.
மனித நேயம் அற்றவர்களுக்கு கீழே நாம் இருக்கிறோம் என்பது பெரிய அவமானமாக உள்ளது. பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று சொல்லும் ஒரு மிகப்பெரிய கூட்டத்திடம் சிக்கி கொண்டோம் என்பது பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற அரசியல் நாகரிகம், பண்பாடற்ற செயல் மரணத்தை விட கொடுமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X