என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவே சோதனை நடைபெறுகிறது: தீபா பேட்டி
Byமாலை மலர்17 Nov 2017 8:30 PM GMT (Updated: 17 Nov 2017 8:30 PM GMT)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதை அறிந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு வந்தார். ஆனால் அவரை உள்ளேவிட போலீசார் மறுத்து விட்டனர்.
இதுதொடர்பாக தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜெயலலிதவின் ரத்த வாரிசு நான் தான். எனக்கு முறைப்படி நோட்டீஸ் கொடுக்காமல் சோதனை நடத்துவது தவறு. சசிகலா குடும்பத்தை கைது செய்ய வேண்டும். அவர்களது ஒத்துழைப்புடன் தான் சோதனை நடைபெறுகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
காவல் துறையினர் என்னை போயஸ் தோட்ட இல்லத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. வருமான வரித்துறையை எதிர்த்து வழக்கு தொடரவுள்ளேன்.
சொத்தில் எங்களுக்கு பங்கு இருக்கிறது. அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். ஜெயலலிதாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே சோதனை நடத்தப்படுகிறது. யாருடைய பெயரில் இந்த சோதனை நடைபெறுகிறது என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதை அறிந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு வந்தார். ஆனால் அவரை உள்ளேவிட போலீசார் மறுத்து விட்டனர்.
இதுதொடர்பாக தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜெயலலிதவின் ரத்த வாரிசு நான் தான். எனக்கு முறைப்படி நோட்டீஸ் கொடுக்காமல் சோதனை நடத்துவது தவறு. சசிகலா குடும்பத்தை கைது செய்ய வேண்டும். அவர்களது ஒத்துழைப்புடன் தான் சோதனை நடைபெறுகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
காவல் துறையினர் என்னை போயஸ் தோட்ட இல்லத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. வருமான வரித்துறையை எதிர்த்து வழக்கு தொடரவுள்ளேன்.
சொத்தில் எங்களுக்கு பங்கு இருக்கிறது. அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். ஜெயலலிதாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே சோதனை நடத்தப்படுகிறது. யாருடைய பெயரில் இந்த சோதனை நடைபெறுகிறது என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X