என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Byமாலை மலர்3 Nov 2017 6:56 AM GMT (Updated: 3 Nov 2017 8:16 AM GMT)
வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் மிக பலத்த மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மேலும் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் 12.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகம் பகுதியில் 30 செ.மீ. மழை பெய்துள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 20 செ.மீ., தரமணியில் 19 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ., பரங்கிப்பேட்டை, சீர்காழியில் 14 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 13 செ.மீ., தாம்பரத்தில் 12 செ.மீ., மகாபலிபுரத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் தமிழக கடலோரத்தை நோக்கி மேலும் நகர்ந்து வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் நிறைய இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களில் நாளை வரை சில இடங்களில் கன மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலுக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது.
சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். சில சமயம் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.
சென்னை வானிலை ஆய்வு மையம், தனது இணைய தள பக்கத்தில் எதிர்வரும் நாட்களில் எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதை தேதி வாரியாக தொகுத்து வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
3.11.17 (வெள்ளிக்கிழமை)- தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். புதுச்சேரி மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களின் உள் பகுதிகளில் சில இடங்களிலும் மழை பெய்யும்.
4.11.17 (சனிக்கிழமை)- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.
5-11-17 (ஞாயிற்றுக்கிழமை)- தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
6-11-17 (திங்கட்கிழமை)- தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்.
மழை எச்சரிக்கை குறிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், “நவம்பர் 3-ந்தேதி (இன்று) தென் தமிழ்நாடு முழுவதும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். நாளை (4-ந்தேதி)யும் தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை- (5-11-17) ராயல சீமா மற்றும் ஆந்திராவின் தென் கடலோரப் பகுதிகளில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 5 மற்றும் 6-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட் டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் மிக பலத்த மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மேலும் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் 12.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகம் பகுதியில் 30 செ.மீ. மழை பெய்துள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 20 செ.மீ., தரமணியில் 19 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ., பரங்கிப்பேட்டை, சீர்காழியில் 14 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 13 செ.மீ., தாம்பரத்தில் 12 செ.மீ., மகாபலிபுரத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் தமிழக கடலோரத்தை நோக்கி மேலும் நகர்ந்து வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் நிறைய இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களில் நாளை வரை சில இடங்களில் கன மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலுக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது.
சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். சில சமயம் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.
சென்னை வானிலை ஆய்வு மையம், தனது இணைய தள பக்கத்தில் எதிர்வரும் நாட்களில் எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதை தேதி வாரியாக தொகுத்து வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
3.11.17 (வெள்ளிக்கிழமை)- தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். புதுச்சேரி மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களின் உள் பகுதிகளில் சில இடங்களிலும் மழை பெய்யும்.
4.11.17 (சனிக்கிழமை)- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.
5-11-17 (ஞாயிற்றுக்கிழமை)- தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
6-11-17 (திங்கட்கிழமை)- தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்.
மழை எச்சரிக்கை குறிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், “நவம்பர் 3-ந்தேதி (இன்று) தென் தமிழ்நாடு முழுவதும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். நாளை (4-ந்தேதி)யும் தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை- (5-11-17) ராயல சீமா மற்றும் ஆந்திராவின் தென் கடலோரப் பகுதிகளில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 5 மற்றும் 6-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட் டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X