என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீஞ்சூரில் மதுக்கடையை மூடக்கோரி குடும்பத்துடன் பெண்கள் மறியல்
Byமாலை மலர்12 July 2017 10:58 AM GMT (Updated: 12 July 2017 10:58 AM GMT)
மீஞ்சூரில் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் குடும்பத்துடன் பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர்:
மீஞ்சூர் புதிய பஸ்நிலையம் அருகே நேற்று புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அருகில் உள்ள விக்னேஷ்நகர், ஏரிக்கரை பத்மாவதி நகர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் குடும்பத்துடன் பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சப்- இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மதுக்கடையை மூடும்வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
இதையடுத்து மதுக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீஞ்சூர் புதிய பஸ்நிலையம் அருகே நேற்று புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அருகில் உள்ள விக்னேஷ்நகர், ஏரிக்கரை பத்மாவதி நகர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் குடும்பத்துடன் பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சப்- இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மதுக்கடையை மூடும்வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
இதையடுத்து மதுக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X