search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலி"

    • நீரின் அடியில் ஆழத்திற்கு சென்ற வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
    • விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகிறது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் 18 வயது வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல் படம் எடுப்பதற்காக 100 அடி ஆழமுள்ள குவாரி ஏரியில் குதித்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் தௌசிப் (18) என்கிற வாலிபர் இன்ஸ்டாகிராம் ரீல்லுக்கு படம் எடுப்பதற்காக 100 அடி உயரத்தில் இருந்து மிகவும் ஆழமுள்ள குவாரி ஏரியில் குதித்துள்ளார்.

    குதித்து நீந்த முயன்ற வாலிபர் நீரில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.

    அங்கு, ஏரியில் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் பலனில்லை.

    இதையடுத்து, இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தௌசிக்கின் சடலம் மீட்கப்பட்டது.

    இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகிறது. அதில், தௌசிக் தண்ணீரில் குதிப்பதையும், அவரது நண்பர் அதனை தைரியமாக வீடியோ பதிவு செய்துள்ளதையும் காட்டுகிறது.

    • லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது.
    • தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

    லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்றும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை. விபத்து தொடர்பான ரேடார் பதிவுகளில், விமானம் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூன்று நிமிடங்களில் 31,000 அடிக்குக் கீழே இறங்கியது. பின் அங்கிருந்து வேகமாக இறங்கி அரை மணி நேரத்திற்குள் பாங்காக்கில் தரையிறங்கியது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் இதுவரை இதுவரை மொத்தம் ஏழு விபத்துகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
    • இந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 20) மகாராஷ்டிரா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் அங்குள்ள பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.

    இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

     

     

    பின்னர், அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் மோதல் வலுவடைவதைத் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். 

    • அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது.
    • ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளைச் செய்ய அதிகாரமுடையவர் ஆவார்.

    ஈரானின் 14 வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உட்பட அவருடன் வந்த முக்கிய அரசு உறுப்பினர்கள் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

    மோசமான வானிலைக்கு மத்தியில் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு மீட்டுப்படை சென்றது. பின் இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது. விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் தற்காலிக அதிபராகத் துணை அதிபர் முகமது மொக்பர் பதவியேற்றார். இந்நிலையில் ஈரான் நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அதிபர் முகமது மொக்பர், நிதித்துறைத் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி-எஜே மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது டெஹ்கான் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தேர்தல் தேதி தீர்மானிக்கப்பட்டது.

     

    ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளைச் செய்ய அதிகாரமுடையவர் ஆவார். மேலும், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால அதிபர் கடமைப்பட்டவர் ஆவார். இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இந்தியா இன்று (மே 21) துக்க தினம் அனுசரிப்பது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் சிக்கி இதுவரை பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

     

    இதில், 3 பேர் காற்றில் வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்களுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். அதில் பெண் ஒருவர் மரத்துக்கு அடியில் இருந்த தனது காரை நகர்த்த சென்றபோது அவர் மீது மரம் பெயர்ந்து விழுந்துள்ளது. சிமெண்ட் டிரக்கில் அமர்ந்திருந்த 73 வயது முதியவர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மணிக்கு 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதில் கட்டிடங்களின் ஜன்னல்களும் கதவுகளும் சுக்குநூறாக உடைந்தன.

     

    நகரத்தில் சுமார் 1 மில்லியன் குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அவசர எண்களுக்கான அனைத்து தொடர்புகளும் துடிக்கப்பட்டதால் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களை மீட்க்கும் பணியில் மீட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்புகளை சரி செய்யும் பணிகளை நகர நிர்வாகம் துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. புயல் காற்றில் கட்டடங்கள் சேதமடையும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

     

    • அரியானாவில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல் கட்ட விசாரணையில், சுற்றுலா பேருந்தில் மொத்தம் 60 பேர் பயணம் செய்தனர் என்றும், ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றதும் தெரிய வந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.

    ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து தீவிபத்தில் சிக்கி 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் கடந்த மே 7 ஆம் தேதி ரவுடி கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கும்பலைச் சேர்ந்த அஜய் சிங்கோரா என்ற முக்கிய ரவுடி, டெல்லி புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று (மே 16) மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் கடந்த மே 7 ஆம் தேதி ரவுடி கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்தனர். கார் ஷோரூம் முற்றிலுமாக சேதமடைந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் ஹிமான்சு பாகு என்ற ரவுடியின் கும்பலைச் சேர்த்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் தங்களின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி ததுப்பாகிச்சூடு நடத்திய ஷோரூமில் பகிரங்கமாக விட்டுச் சென்றுள்ளனர்.

    இதனையடுத்து குற்றவாளிகளை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த அஜய் சிங்கோரா என்ற முக்கிய ரவுடி, டெல்லி புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று (மே 16) மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த போலீசார் குற்றவாளியை சுற்றி வளைத்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் அஜய் சிங்கோராவை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

    இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றொரு கொலை வழக்கிலும் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த என்கவுன்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்தகட்டமாக ரவுடி கும்பலின் தலைவன் ஹிமான்சு பாகுவை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். டெல்லியை பயமுறுத்தி வந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரை போலீசார் என்கவுன்டர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மும்பையில் கடந்த மே 13 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று பெட்ரோல் நிலயத்தின் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் ஷிண்டே தலைமறைவானார்.

    மும்பையில் கடந்த மே 13 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று பெட்ரோல் நிலயத்தின் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மகாராஷ்டிர அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்தது.

    உரிய அனுமதியின்றி ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஈகோ டிஜிட்டல் நிறுவனம் விளம்பரப் பலகையை நிறுவியதால்தான் 14 உயிர்கள் பலியானது என்று கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று அந்த ராட்சத பலகையை ஈகோ நிறுவனம் விளம்பரப் படுத்தியிருந்தது.

    இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் ஷிண்டே தலைமறைவானார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை காவல்துறை தீவிரமாக தேடிவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாவேஷ் ஷிண்டேவை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பாவேஷ் ஷிண்டே மீது ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் இன்று (மே 16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.
    • இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் இன்று (மே 16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.

    இன்று மதியம் முதல் மால்டா பகுதிகளில் கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

     

    நகர் பகுதியைக் காட்டிலும் அம்மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சோபாநகர் கிராமப்பகுதியில் நெல் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

     

    இதுபோன்று பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மால்டா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 3 வயது பெண் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • பிரதீப் நாகர் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஜோரவார்புரா கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 3 வயது பெண் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜாதான் மாநிலம் கோட்டா நகருக்கு அருகில் உள்ள ஜோரவார்புரா என்ற கிராமத்தில் நேற்று (மே 15) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

     

    பிரதீப் நாகர் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஜோரவார்புரா கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார். அவரின் மனைவியும் மூத்த மகளும் காரிலிருந்து இறங்கி அருகில் இருந்த பூங்காவுக்கு சென்ற நிலையில், பிரதீப், தனது இளைய மகள் கோர்விகா சாகர் மனைவியுடன் இறங்கி சென்றுவிட்டதாக கருதி மகள் உள்ளே இருப்பதை அறியாமல் காரை லாக் செய்துவிட்டு பூங்காவுக்கு சென்றுள்ளார்.

    அவரின் மனைவியோ மகள் கணவருடன் வந்துகொண்டிருக்கிறாள் என்று நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார். இதனிடையே சுமார் 2 மணி நேரம் கழித்தே குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் உணர்ந்து காருக்கு சென்று பார்க்கையில், குழந்தை மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் காருக்குள் இருந்துள்ளது. உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர்கள் தூக்கிச்சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் காவல்துறையினர், பெற்றோர்கள் குழந்தையின் பிரேத பரிசோதனை செய்யவும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

    • சிறுவனை காப்பாற்ற அடுத்தடுத்து இறங்கிய சிறுவர்களும் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    கர்நாடகாவில் திம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு சிறுவன் சேற்றில் சிக்கிய நிலையில், அந்த சிறுவனை காப்பாற்ற அடுத்தடுத்து இறங்கிய சிறுவர்களும் சேற்றில் சிக்கிய பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் ஜீவன் (13), சாத்விக் (11), விஷ்வா (12), பிருத்வி (12) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    சென்னை:

    செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.

    விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது.

    அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பழுதாகி நின்ற லாரி மீது மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது.

    இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் மீது முசிறியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்துக்களில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

    தகவலறிந்த போலீசார் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×