search icon
என் மலர்tooltip icon
    • காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்
    • நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்

    உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகிநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,

    "காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். அதாவது, பசுவதையை எந்தத் தடைகளும் இன்றி அனுமதிக்கப் போகிறார்கள் என்று அதற்கு அர்த்தம். நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்.

    அதாவது, ஒருவரது வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அதில் இரண்டை அவர்களே எடுத்துச் சென்று விடுவார்கள். அதுமட்டுமின்றி, பெண்களின் நகைகளை கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது, இதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

    கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவர்கள் முயலுகின்றனர்.

    நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

    நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் சதி செய்து வருகிறது. ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் ராமர் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கினர். ஆனால் தெய்வம் அனைவருக்கும் உள்ளது. இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.

    'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட தயங்குபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
    • உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.

    மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தது வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.

    இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுப்பட்டார். பிரசாரம் முடிந்து துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்ற போது நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

    நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் மம்தா தனது பயணத்தை தொடர்ந்தார்.

    அசன்சோலுக்குச் செல்வதற்காக துர்காபூரில் இருந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
    • பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மல்லியாகர்ஜூன கார்கே கூறியதாவது:-

    ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். மோடி, அமித் ஷா ஆகிய இருவரும விற்பனையாளர்கள். அப்படி என்றால் வாங்குபவர்கள் யார்? அதானி, அம்பானி ஆகிய இரண்டு வாங்குபவர்கள். இப்படித்தான் நாடு வளர்ச்சி அடையும்?.

    அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இல்லை. பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார். 16 லட்சம் கோடி ரூபாயை கோடீஸ்வரர்களுக்காக தள்ளுபடி செய்துள்ளனர். ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது
    • காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளனர்

    சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளனர்.

    ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

    அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி நெதர்லாந்தினை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

    கலப்பு அணி பிரிவில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர்.

    நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜோதி சுரேகாவுக்கு இது இரட்டை தங்கப் பதக்கமாகும். மேலும் தனிநபர் பிரிவில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள அவர் அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்ள இருக்கிறார். .

    கலப்பு பிரிவில் தனி நபர் பதக்கத்திற்கான போட்டியில் பிரயன்ஷ் உள்ளார். ரீகர்வ் பதக்க சுற்றுகள் நாளை நடைபெறுகின்றன. இதில் 2 தங்கங்களை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்க மோதலில் ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் தீபிகா குமாரி பெண்கள் ரிகர்வ் பிரிவின் அரையிறுதியில் தென் கொரியாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

    • முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.
    • திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மாதம் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

    இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.

    இந்நிலையில் இவ்வழக்கில் கைதான அப்துல் மதின் தாஹா என்பவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
    • மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திப் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. ஜேக் பிரேசர்-மெக்கர்க், 2. குமார் குஷாக்ரா, 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ஸ்டப்ஸ், 6. அபிஷேக் பொரேல், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. லிசாட் வில்லியம்ஸ், 10. முகுஷ் குமார், 11. கலீல் அகமது.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- ரிசிக் தர் சலாம், பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், ரிக்கி புய், சுமித் குமார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. இஷான் கிஷன், 3. திலக் வர்மா, 4. நேஹால் வதேரா, 5. ஹர்திக் பாண்ட்யா, 6. டிம் டேவிட், 7. முகமது நபி, 8. பியூஷ் சாவ்லா, 9. லுக் வுட், 10. பும்ரா, 11. நுவான் துஷாரா.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- சூர்யகுமார் யாதவ், நமன் திர், ஷாம்ஸ் முலானி, தெவால்ட் பிரேவிஸ், குமார் கார்த்திகேயா

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர் சாலையில் கீழே விழுந்தார்.
    • 20,000 அரசு பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் - தலைமை செயலாளர்

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசு பேருந்துகள் சேதமடைவது தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர் சாலையில் கீழே விழுந்தார். இதே போன்று விருதுநகரிலும் பேருந்தில் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது.

    இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேருந்துகள் எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பாக நேற்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்துக்கு துறையானது ஒரு விரிவான உத்தரவை அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கும் வழங்கியுள்ளது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் விரைவு போக்குவரத்து கீழ் இயங்கப்படும் விரைவு பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் வெளியூர் பேருந்துகள் சென்னையில் இயங்கப்படும் மாநகர பேருந்து உள்ளிட்ட 20,000 பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆய்வு செய்த பின்பு அந்த பேருந்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிந்து அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

    • வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன்.
    • அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கான இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்.

    காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பார்ளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    அப்போது அமேதி, ரேபரேலி தொகுதியில் யாரை நிறுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. மேலும், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதி வேட்பாளர்களுக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆலோசனை முடிந்து வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன். அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்

    ராகுல் காந்தி தொகுதி மாறியதாக அடிக்கடி கூறப்படுகிறது. வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் எத்தனை முறை தொகுதிகள் மாறினார்கள் என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி பாய்ந்தோடும் ஆறு போன்றது. கட்சியில் வளர்ச்சி பெற்று பின்னர் வெளியேறிய சிலரால் பாதிக்கப்படாது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது.
    • விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

    அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத்தின் அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள கிரீன்வில்லி மாகாணத்தில் உள்ள காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், " வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரத்தில் பறந்து பாலத்தின் எதிர்புறத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது. மரத்தில் மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொருங்கியது.

    3 இந்தியப் பெண்கள் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.
    • 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு (2023-24) கல்வி ஆண் டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.

    அதன்படி, 6, 7-ம் வகுப்பு களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப் பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.

    அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×