search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கடுத்து ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவர் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
    • பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் அவரைப் பாதுகாக்கப் போவதில்லை. கடும் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

    ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது.

    இந்நிலையில், பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி உள்ளது.

    • தமிழ்நாட்டில் இருந்து அரசு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார்.
    • தற்போது கர்நாடகத்தின் 4 முக்கிய அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டுக்கான சுற்றுச்சூழல் பற்றாக்குறை நீரை பிலிகுண்டுலுவில் உறுதிப்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

    இதில் சம்பந்தப்பட்ட 4 மாநில அதிகாரிகளும் ஆன்லைனில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து அரசு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் கடந்த மாதம் 28-ந்தேதி வரை பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 174 டி.எம்.சி. நீரில் 78 டி.எம்.சி. மட்டுமே கர்நாடகம் தந்துள்ளது என்றும், மீதம் உள்ள 95 டி.எம்.சி. நீரை வழங்காமல் உள்ளது.

    இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 28-ந்தேதி வரை பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய சுற்றுச்சூழல் நீரின் அளவான 7.333 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை. மாறாக 2.016 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது.

    தற்போது கர்நாடகத்தின் 4 முக்கிய அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டுக்கான சுற்றுச்சூழல் பற்றாக்குறை நீரை பிலிகுண்டுலுவில் உறுதிப்படுத்த வேண்டும். அதுபோல மே மாதத்துக்கான சுற்றுச்சூழல் நீரின் அளவான 2.5 டி.எம்.சி. தண்ணீரையும் வழங்க கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வுமைய உறுப்பினர், பிப்ரவரி 1-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை கோடைமழை இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளது என்றும், அடுத்த 2 வாரங்களுக்கு காவிரிப் படுகையில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்தார்.

    இதனை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொண்ட கர்நாடக அரசின் உறுப்பினர், "கர்நாடக அணைகளில் தற்போது உள்ள தண்ணீர், கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்காக மட்டுமே போதுமானதாக இருக்கும். எனவே, தமிழ்நாட்டுக்கு மேலும் தண்ணீரை வழங்க முடியாது" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இப்படி நீண்டநேரம் விவாதம் நீடித்தது. இதனைத்தொடர்ந்து ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா, மே மாதத்துக்கான சுற்றுச்சூழல் நீரின் அளவான 2.5 டி.எம்.சி. நீரை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் உறுதிப்படுத்த வேண்டும் என கர்நாடகத்தை வலியுறுத்தினார்.

    பின்னர் குழுவின் அடுத்த கூட்டத்தை வருகிற 16-ந்தேதி நடத்துவதாக தெரிவித்து கூட்டத்தை அவர் முடித்தார்.

    • தன்னிடம் காசு இல்லையே என அந்த சிறுமி கூறுகையில் அந்த மர்ம பரிசு பெட்டியை அவளிடம் கொடுத்து பிரித்து பார்க்க சொல்கிறார்.
    • பிரபல கைகெடிகார நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று இருந்தநிலையில் அதனை அணித்து கொள்ளுமாறு சிறுமியை அறிவுறுத்துகிறார்.

    பெங்களூருவை சேர்ந்தவர் பிரதீஷ். சமூக வலைத்தள பிரபலமான இவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தநிலையில் சாலையோரத்தில் டீ-சர்ட் விற்றுவந்த சிறுமி ஒருவருக்கு பரிசு பொருள் வாங்கி கொடுப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சாலையில் பிரதீஷ் நடந்து சென்று கொண்டிருக்கையில் நடைபாதையில் டீ-சர்ட் விற்கும் சிறுமியை அவர் பார்க்கிறார். பின்னர் அந்த சிறுமியிடம் சென்று ரூ.10 கொடுத்து தன்னிடம் உள்ள மர்ம பரிசுபொருள் பெட்டியை வாங்கி கொள்கிறாயா? என அவர் கேட்கிறார். அதற்கு தன்னிடம் காசு இல்லையே என அந்த சிறுமி கூறுகையில் அந்த மர்ம பரிசு பெட்டியை அவளிடம் கொடுத்து பிரித்து பார்க்க சொல்கிறார்.

    அதில் பிரபல கைகெடிகார நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று இருந்தநிலையில் அதனை அணித்து கொள்ளுமாறு சிறுமியை அறிவுறுத்துகிறார். ஆனந்த அலையில் சிறுமி கைகெடிகாரத்தை அணிவதுடன் முடிகிறது. "சின்ன செய்கை பெரிய மாற்றத்தை உண்டாக்கும்-அன்பை பரப்புங்கள்" என்ற கருத்துடன் அவர் பதிவிட்டுள்ள இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவை இதுவரை 4½ லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்த விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

    இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்த பென்டிரைவை அவரது முன்னர் ஓட்டுநர் கார்த்திக் 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியிருந்தது.

    இதனையடுத்து, இந்த தகவலை ஓட்டுநர் கார்த்திக் மறுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்த பென்டிரைவை ஹாசன் பாஜக தலைவர் தேவராஜ் கவுடாவிடம் தான் நான் கொடுத்தேன். பாஜக தலைவரைத் தவிர வேறு யாரிடமும் இதை நான் கொடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
    • இது வெட்கக் கேடான பிரச்சனை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை என்றார் குமாரசாமி.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹூப்ளி தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதற்கிடையே, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமித்து உத்தரவிட்டது. அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்த விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது வெட்கக் கேடான பிரச்சனை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை என்றார்.
    • கள யதார்த்தத்தை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கமே அன்றி நான் அல்ல எனவும் குமாரசாமி கூறினார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் அவரைப் பாதுகாக்கப் போவதில்லை. கடும் நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு அதிகம்.

    உறவினராக மட்டுமல்ல, நாட்டின் சாமானியனாகவும் நாம் மேலும் முன்னேறவேண்டும்.

    இது வெட்கக்கேடான பிரச்சனை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை. இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நாங்கள் போராடினோம். இது ஒரு தீவிரமான பிரச்சனை.

    ஆட்சியை யார் நடத்துகிறார்கள், அவர்கள் உண்மையான நிலவரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

    கள யதார்த்தத்தை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கமே அன்றி நான் அல்ல என தெரிவித்தார்.

    • வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயரை சேர்த்த மணமகன் சிக்கலில் தவிக்கிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் கடந்த 26-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட புத்தூர் தாலுகாவை சேர்ந்த உப்பினங்கடி போலீசாருக்கு புகார் ஒன்று வந்தது. இதில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட மணமகன் ஒருவர் தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டார் என சர்ச்சை எழுந்தது.

    பிரதமர் மோடியை மீண்டும் தேர்ந்தெடுப்பதே தம்பதிக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பரிசாக இருக்கும் என்ற வரியை திருமண அழைப்பிதழில் இடம்பெறச் செய்திருந்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடம் மணமகன் உறவினர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மணமகனின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, மார்ச் 1-ம் தேதி திருமண வரவேற்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அந்த வரியானது பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் சேர்க்கப்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார்.

    அந்நபருக்கு கடந்த 18-ம் தேதி திருமணம் நடந்தது. அவர் விளக்கம் அளித்தபோதும் கடந்த 26-ம் தேதி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் ஒன்றை அளித்தது. இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. திருமண அழைப்பிதழை அச்சடித்த உரிமையாளரிடம் தேர்தல் ஆணையமும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு.
    • பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக புகார்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவன்னா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்ணை பணிக்கு அமர்த்தியதாக ரேவன்னா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    முன்னாள் பிரதமர் தேகவுடாவின் மகன் மற்றும் பேரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாத்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி வயநாடு எம்பி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை
    • முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்ததை காங்கிரஸ் மறந்துவிட்டதாக தெரிகிறது

    கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி "பல ராஜாக்கள், மகாராஜாக்கள் நம்மை மீண்டும் ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியதைச் செய்து, விவசாயிகளின் நிலத்தை விருப்பப்படி பறித்தார்கள்.

    காங்கிரசும் அதன் தொண்டர்களும்தான், சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் சேர்ந்து, ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து இந்திய மக்களுக்கு சுதந்திரம் அளித்து, நாட்டில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மீட்டெடுத்தார்கள் என்று பேசியிருந்தார்.

    ராகுல்காந்தியை இந்த பேச்சிற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் பெலகாவியில் இன்று நடைபெற்ற மெகா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் இளவரசன் (ராகுல்காந்தி), அன்றைய நமது ராஜாக்களும், மகாராஜாக்களும் இரக்கமற்றவர்கள் என்றும் அவர்கள் ஏழைகளின் எளிய சொத்துக்களைப் பறித்தனர்.

    சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் கிட்டூர் இராணி சென்னம்மா ஆகியோரின் நல்லாட்சி மற்றும் தேசபக்தி இன்னும் நம்மை தேசப் பெருமையையும் கௌரவத்தையும் நிரப்புகின்றன. அப்படிப்பட்டவர்கர்களை ராகுல்காந்தி அவமதித்துள்ளார்.

    நாம் அனைவரும் மிகவும் உயர்வாகக் கருதும், பெருமைப்படும் மைசூர் அரச குடும்பத்தின் பங்களிப்பு பற்றி அவருக்குத் தெரியாதா?

    நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாத்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி வயநாடு எம்பி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

    முஸ்லிம் பேரரசர்கள் தங்கள் விவசாயிகளுக்கு இழைத்த அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மௌனமாக இருக்கிறார்.

    முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்ததை காங்கிரஸ் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

    ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வாக்கு வங்கியை பெறுவதற்காக அவர் பேசுகிறார். ராகுலுக்கு கவலை அளிப்பது அவரது வாக்கு வங்கி மட்டுமே.

    நமது புனிதத் தலங்களை அழித்த, கொள்ளையடித்த, நம் மக்களைக் கொன்று குவித்த கால்நடைகளையும் படுகொலை செய்த மன்னர்களைப் பற்றி அவர் பேசுவதில்லை

    முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்-ஐ புகழ்ந்து பேசுவபர்கள் உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது

    பெனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அந்நாளில் நகரத்தை ஆண்ட அரசரின் உதவியின்றி நிறுவப்பட்டிருக்க முடியாது.

    பரோடாவின் மகாராஜா கெய்க்வாட், பாபா சாகேப் அம்பேத்கரை வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க உதவியிருக்கிறார்.

    இதெல்லாம் காங்கிரசின் இளவரசனுக்கு தெரியாது" என்று அவர் தெரிவித்தார்.

    • முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட பலர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது என்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனதால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது. வறட்சி, பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18,171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடகா கோரிக்கை விடுத்தது.

    இதற்கிடையே வறட்சி, நிவாரண பணிக்காக கர்நாடகாவுக்கு மத்திய அரசு 3, 454 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது கர்நாடக அரசு விடுத்த கோரிக்கை தொகையை விட மிகக் குறைவாகும்.

    இந்நிலையில், வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாக கூறி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டிகே சிவக்குமார், மந்திரிகள் ஆகியோர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கர்நாடக சட்டசபை வளாகத்திற்கு வெளியே திரண்ட அனைவரும் கையில் சொம்பு ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.
    • தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.

    பெங்களூரு:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பலமாக மாறியுள்ளது. இதை நினைத்து அனைவரும் பெருமைபடுவார்கள். ஆனால் இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.

    தேச நலனில் இருந்து அந்த கட்சி விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் காங்கிரஸ் மூழ்கியுள்ளது.

    நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க காங்கிரஸ் சதி செய்தது. இதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பிடம் காங்கிரஸ் உதவி பெற்றுள்ளது.

    நமது ராஜா, மகாராஜாக்களை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) அவமதிக்கிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஆளுமைகளை அவமதித்துள்ளார். நாம் அனைவரும் பெருமைபடும் மைசூர் அரச குடும்பத்தினர் பங்களிப்பு அவருக்கு தெரியாதா?

    ஆனால் நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாதுஷாக்கள் செய்த அட்டூழியங்களை பற்றி அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.


    நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த அவுரங்கசீப் செய்த அட்டூழியங்கள் காங்கிரசுக்கு நினைவில்லை. அவுரங்க சீப்பை புகழ்ந்து பேசும் கட்சியுடன் காங்கிரஸ் அரசியல் கூட்டணி அமைக்கலாம்.

    நமது புனித தலங்களை அழித்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், மக்களை கொன்றவர்கள், பசுக்களை கொன்றவர்கள் பற்றி எல்லாம் அவர்கள் பேசுவதில்லை.

    மக்களின் சொத்துக்களை 55 சதவீதம் பறிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஹூப்ளியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் சமாதானத்துக்கு முன்னுரிமை அளித்தது. நேஹா போன்ற எங்கள் மகள்களின் உயிருக்கு மதிப்பில்லை. அவர்களுக்கு கவலை எல்லாம் அவர்களின் வாக்கு வங்கி மட்டுமே.

    பா.ஜனதா அரசு குற்றவியல் நிதி அமைப்பின் காலனித்துவ சட்டங்களை நீக்கியது. பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இதை தொடர்ந்து உத்தரகன்னடா, தாவன கெரே, பாகல் கோட்டை ஆகிய 3 இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதி களில் 14 இடங்களுக்கு கடந்த 26-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு மே மாதம் 7-ந் தேதி நடக்கிறது. 

    ×