என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன்னாள் பிரதமர்"
- கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர்.
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கும் (43) அவரது நீண்ட நாள் காதலரான க்லார்கே கேஃபோர்டுக்கும் (47) கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பிறகு, கொரோனா பரவல் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில், ஜெசிந்தா ஆர்டனுக்கும் க்லார்கே கேஃபோர்டுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்பேலாது ஆர்டெர்ன் ஒரு வெள்ளை நிற ஆடையும், கேஃபோர்ட் கருப்பு நிற உடையையும் அணிந்திருந்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணமக்கள் இருவருக்கும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிலை அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா தீர்மானம் நிறைவேற்றினர்.
- மாவட்ட பொருளாளர் நவீன அரசு நன்றி கூறினார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை யில் நடைபெற்றது. பொதுச் செயலாளர்கள் குமார், பாலகிருஷ்ணன், ராஜ்கு மார் ஆகியோர் முன்னிலை வகித்து தீர்மானங்கள் வாசித்தனர்.
துணைத்தலைவர்கள் வினோத்குமார், ஜோதி மணிவண்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளாட்சி பிரிவு மாநில தலைவர் சோழன் சீதா பழனிச்சாமி, தேசிய பொது குழு உறுப்பினர்கள் சண்முகராஜா, மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தி.மு.க. ஊழல் பட்டியலை வெளி யிட்ட மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவிப்பது, இந்தியா முழுவதும் தங்க நாற்கர சாலை திட்டத்தை நிறைவேற்றிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு மதுரை மாவட்ட பகுதியில் சிலை அமைக்க வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
செயற்குழு கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு , செயலா ளர்கள் செண்பக பாண்டி யன், ரமேஷ் கண்ணன், தனலட்சுமி, மாநில மகளிர் அணி செயலாளர் மீனாம்பிகை, பட்டியல் அணி செயலாளர் சிவாஜி, ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிர் அணி தலைவர் மீனா இசக்கிமுத்து, இளைஞரணி தலைவர் பாரிராஜா, வழக்கறிஞர் அணி தலைவர் அய்யப்ப ராஜா, மருத்துவ பிரிவு தலைவர் முரளி பாஸ்கர், ஐ.டி. பிரிவு மணிவண்ணன் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் நவீன அரசு நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்