என் மலர்tooltip icon

    உலகம்

    மீண்டும் பணிக்குத் திரும்பிய முன்னாள் பிரதமர்: அறக்கட்டளைக்கு சம்பளம் வழங்கும் ரிஷி சுனக்
    X

    மீண்டும் பணிக்குத் திரும்பிய முன்னாள் பிரதமர்: அறக்கட்டளைக்கு சம்பளம் வழங்கும் ரிஷி சுனக்

    • கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி தோல்வி அடைந்தது.
    • இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி தலைவராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து, கடந்தாண்டு ரிஷி சுனக் தலைமையில் பொதுத் தேர்தலை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்தது. தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை கடந்தாண்டு ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். தேர்தலில் வெற்றி பெற்ற அவர் எம்.பி.யாக தொடர்கிறார்.

    இந்நிலையில், ஆரம்ப காலத்தில் பணிபுரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாச்சிஸ் நிதி நிறுவனத்தில் மீண்டும் ரிஷி சுனக் பணியில் சேர்ந்துள்ளார்.

    முதுநிலை ஆலோசகர் பணியில் ரிஷி சுனக் இணைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளார். உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சீனியர் ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார்.

    தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் 'தி ரிச்மண்ட் திட்டம்' என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

    கோல்டுமேன் சாச்சிஸ் நிதி நிறுவனத்தில் தொடக்க நிலை பணியாளராக சேர்ந்து ரிஷி சுனக் 5 ஆண்டு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×