என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மால்டா
நீங்கள் தேடியது "மால்டா"
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடினார். #VenkaiahNaidu
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக, செர்பியா சென்றடைந்த வெங்கையா நாயுடுவுக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், செர்பியா அதிபர் அலெக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. அப்போது இரு நாடுகளின் உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இர்நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மால்டாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புளோரியானா பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடினார். அப்போது இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #VenkaiahNaidu
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று அதிகாலை காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Accident #WestBengal
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் ராம்புர்ஹத் பகுதியில் உள்ள தனது உறவினர்களின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் சென்றுள்ளனர். நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊரான மால்டா பகுதிக்கு காரில் வந்துகொண்டிருந்தனர்.
மால்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் ஓட்டுனர் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர். #Accident #WestBengal
மேற்குவங்க மாநிலம் ராம்புர்ஹத் பகுதியில் உள்ள தனது உறவினர்களின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் சென்றுள்ளனர். நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊரான மால்டா பகுதிக்கு காரில் வந்துகொண்டிருந்தனர்.
மால்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் ஓட்டுனர் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர். #Accident #WestBengal
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X