என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்கத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி
Byமாலை மலர்26 Jun 2018 5:00 AM GMT (Updated: 26 Jun 2018 5:00 AM GMT)
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று அதிகாலை காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Accident #WestBengal
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் ராம்புர்ஹத் பகுதியில் உள்ள தனது உறவினர்களின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் சென்றுள்ளனர். நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊரான மால்டா பகுதிக்கு காரில் வந்துகொண்டிருந்தனர்.
மால்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் ஓட்டுனர் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர். #Accident #WestBengal
மேற்குவங்க மாநிலம் ராம்புர்ஹத் பகுதியில் உள்ள தனது உறவினர்களின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் சென்றுள்ளனர். நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊரான மால்டா பகுதிக்கு காரில் வந்துகொண்டிருந்தனர்.
மால்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் ஓட்டுனர் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர். #Accident #WestBengal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X