search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SMART CLASSROOMS"

    • ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 புதிய ஸ்மார்ட் வகுப்புகள் கட்டி கொடுத்துள்ளனர்.
    • ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 15.வேலம்பாளையம் நடுநிலை ப்பள்ளியில் வேலம்பாளையம் அறிவுத்திருக்கோவில் மற்றும் அட்சயா அறக்கட்டளை சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 புதிய ஸ்மார்ட் வகுப்புகள் கட்டி கொடுத்துள்ளனர்.இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய ஸ்மார்ட் வகுப்புகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம், ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பத்மாவதி, செல்வராஜ், அனுசுயாதேவி, சண்முகசுந்தரம், பிரேமலதா , கோட்டா பாலு, அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 208 பள்ளிகளுக்கு ரூ.4.16 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு வருகிறது.
    • செண்பகராமநல்லூரிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டும், கல்வி திறனை மேம்படுத்தும் வகையிலும், நெல்லையை கல்வியில் முதன்மை மாவட்டமாக மாற்றும் வகையிலும் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் 208 பள்ளிகளுக்கு முதற்கட்டமாக மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.4.16 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு வருகிறது.

    அதாவது, பாளையங்கோட்டை ஒன்றிய பகுதியில் 35 பள்ளிகளிலும், களக்காடு ஒன்றியத்தில் 21 பள்ளிகளிலும், மானூர் ஒன்றியத்தில் 59 பள்ளிகளிலும், நாங்குநேரி ஒன்றியத்தில் 60 பள்ளிகளிலும், பாப்பாக்குடி ஒன்றியத்தில் 24 பள்ளிகளிலும், சேரன்மாதேவி ஒன்றியத்தில் 9 பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த வகுப்பறைகள் திறப்பு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நாங்குநேரி சுப்புலட்சுமி மகாலில் நடக்கிறது.

    தொடர்ந்து செண்பகராமநல்லூரிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட இருக்கிறது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

    • கருத்து கேட்பு கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி பேசினார்.
    • ஸ்மார்ட் வகுப்பறைகள் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகம் சாரல் கலையரங்கில், அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் (உயர்தர அறிவுத்திறன்) வகுப்பறைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'அனைத்து பள்ளிகளிலும் நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களின் கல்வித்தரம் உயரும் நோக்கத்தில், தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பயில்வது போன்று அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் பயிலும் வண்ணம் அமைக்கப்பட்டு வருகின்றன. வகுப்பறைகளை குறைகள் இல்லாத வண்ணம் எவ்வாறு அமைப்பது என்பது குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதி உள்ளதா? அல்லது எவ்வாறு அமைப்பது? என்பது குறித்து கேட்கப்பட்டது.

    கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரை வைத்து திறப்பது குறித்து கூறப்பட்டது. அவர்கள் திறந்து வைத்த பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று திறந்து வைக்கப்படும். அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் நேரில் ஸ்மார்ட் வகுப்பறைகள் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்படும்' என்றார்.

    மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ் ஸ்மார்ட் வகுப்பறை சிறப்புகளை எடுத்துரைத்தார். உதவி திட்ட அலுவலர் சுமதி திட்ட விளக்க உரையாற்றினார். முன்னதாக மாவட்ட பஞ்சாயத்து செயலர் சுப்ரமணியம் வரவேற்று பேசினார்.

    உதவி இயக்குனர் அனிதா நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கனகராஜ், சாலமோன், டேவிட், மகேஷ், ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, சத்தியவாணிமுத்து, கிருஷ்ணவேணி, தனிதங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×