search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட் வகுப்பறை"

    • மாணவ-மாணவிகளை ஊக்கப் படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
    • போங் விசேட் பைத்தூன், ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து பேசினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் ஆந்திராவில் சி.பி.எப். நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் தான் படித்த பள்ளிக்கு உதவிடும் வகையில் தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் சார்பில் நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக உதவி செய்துள்ளார்.

    நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.எப். இந்தியா நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கல்வியில் சிறந்த மாணவ-மாணவிகளை ஊக்கப் படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆல்வின் பாலன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சி.பி.எப். நிறுவனத்தின் சேர்மன் போங் விசேட் பைத்தூன், ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்களை வழங்கி பேசினார்.

    இந்த விழாவில் சி.பி.எப். நிறுவனத்தின் துணை சேர்மன் குவான் சைபிரேம், சி.பி.எப். நிறுவனத்தின் தலைவர் சிரபோங்க் பொங்சா, துணை தலைவர் சைரட் அன்சரி பைக்கான், சீனியர் துணை தலைவர் சித்திசாய் சீஹோ, ஆந்திரா விற்பனை பிரிவு துணை தலைவர் வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வசந்தி ஜான்சி ராணி வரவேற்றார். பள்ளியில் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பள்ளி மாணவ -மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • எம்.பி. செந்தில்குமார் தனது எம்.பி. நிதியிலிருந்து புதிய ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துக் கொடுத்தார்.
    • எம்.பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மாணவிகளிடையே உரையாற்றினார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் படிப்பு திறனை அதிகரிக்கவும், கல்வித்திறனை மேம்படுத்தவும், எம்.பி. செந்தில்குமார் தனது எம்.பி. நிதியிலிருந்து புதிய ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துக் கொடுத்தார். அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் எம்.பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மாணவிகளிடையே உரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்க சரவணன், தலைமை ஆசிரியை சுமதி மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 புதிய ஸ்மார்ட் வகுப்புகள் கட்டி கொடுத்துள்ளனர்.
    • ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 15.வேலம்பாளையம் நடுநிலை ப்பள்ளியில் வேலம்பாளையம் அறிவுத்திருக்கோவில் மற்றும் அட்சயா அறக்கட்டளை சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 புதிய ஸ்மார்ட் வகுப்புகள் கட்டி கொடுத்துள்ளனர்.இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய ஸ்மார்ட் வகுப்புகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம், ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பத்மாவதி, செல்வராஜ், அனுசுயாதேவி, சண்முகசுந்தரம், பிரேமலதா , கோட்டா பாலு, அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் புதிய கற்றல் அனுபவத்தைத் தருவது ஸ்மார்ட் வகுப்பறைகளாகும்.
    • படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கற்கும் போது மாணவர்கள் மனதில் காட்சிகளாக பதிவாகி விடுகிறது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படம் கற்பதில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் புதிய கற்றல் அனுபவத்தைத் தருவது ஸ்மா ர்ட் வகுப்பறை களாகும். எழுத்துக்கள் மூலம் கற்பதை விடவும் படங்கள் மற்றும் வீடியோ க்கள் மூலம் கற்கும் போது மாணவர்கள் மனதில் காட்சிகளாக பதிவாகி விடுகிறது. இது மாணவ ர்களின் கற்றல் அனுபவ த்தை எளிதாக்கு கிறது.மேலும் ஸ்மார்ட் வகுப்ப றைகள், கணினி, ப்ரொ ஜெக்டர் உள்ளிட்ட வசதி களு டன் இணையதள இணைப்பும் கொண்டி ருப்பது மாணவ ர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரி யர்களுக்கும் மிகப் பெரிய வரமாகும். மாணவ ர்க ளுக்கு தேவையான எல்லா விதமான தகவல்களையும் சில நொடிகளில் திரையில் கொண்டு வர இணையம் உதவுகிறது. ஆனால் இத்தகைய ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் ஒருசில தனியார் பள்ளிகள் மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறைகளைப் பயன்படுத்தி கற்பிக்கின்றன.

    இந்தநிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் அரசின் திட்டத்தில் ஒரு மைல் கல்லாக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரம் நகராட்சி ஆரம்ப மற்றும் நடுநிலை ப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உடுமலை நகராட்சி 26 வது வார்டு டி.வி பட்டினம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொட ங்கப்ப ட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த வகுப்பறையை தி.மு.க. நகர செயலாளர் வேலுச்சாமி, நகர்மன்றத் தலைவர் மத்தீன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும் ஸ்மார்ட் வகுப்ப றைகள் இயக்கம் மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி.குமார்,நகர் மன்ற உறுப்பினர் அஸ்வதி விக்ரம்,நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் பள்ளிகளை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து ''சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்'' என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டு, ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஒரு ஆண்டுக்கு இணையதள வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை அமைத்திட ரூ.56 லட்சத்து 60 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் மற்றும் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் ரூ.28 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த விரும்பும் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

    • மேலூர் அல் அமீன் உருது தமிழ் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை தாளாளர் தொடங்கி வைத்தார்.
    • பள்ளியின் தலைவர் காதர்மைதீன் தலைமை தாங்கினார்.

    மேலூர்

    மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடந்தது. பள்ளியின் தலைவர் காதர்மைதீன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். தாளாளர் எம்.ஓ. சாகுல் ஹமீது கட்டிடத்தை திறந்து வைத்தார். ஸ்மார்ட் வகுப்பு காணொலி காட்சியை முன்னாள் மாணவர் மனோஜ்குமார் தொடங்கி வைத்து பேசினார். தலைமை ஆசிரியர் சலீம் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ஷாஜகான், ஜபார், ராஜா முகமது, காஜாமைதீன், சித்திக் ராஜா, பிலால்முகமது, ராஜாமுகமது, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நூர்ஜகான் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் அப்துல்ரஹ்மான் நன்றி கூறினார். மேலூர் தாலுகா அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேலூர் அல் அமீன் பள்ளியில் முதன்முதலாக ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×