search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அரசுப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்கம்
    X

    உடுமலை நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். 

    உடுமலை அரசுப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்கம்

    • நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் புதிய கற்றல் அனுபவத்தைத் தருவது ஸ்மார்ட் வகுப்பறைகளாகும்.
    • படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கற்கும் போது மாணவர்கள் மனதில் காட்சிகளாக பதிவாகி விடுகிறது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படம் கற்பதில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் புதிய கற்றல் அனுபவத்தைத் தருவது ஸ்மா ர்ட் வகுப்பறை களாகும். எழுத்துக்கள் மூலம் கற்பதை விடவும் படங்கள் மற்றும் வீடியோ க்கள் மூலம் கற்கும் போது மாணவர்கள் மனதில் காட்சிகளாக பதிவாகி விடுகிறது. இது மாணவ ர்களின் கற்றல் அனுபவ த்தை எளிதாக்கு கிறது.மேலும் ஸ்மார்ட் வகுப்ப றைகள், கணினி, ப்ரொ ஜெக்டர் உள்ளிட்ட வசதி களு டன் இணையதள இணைப்பும் கொண்டி ருப்பது மாணவ ர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரி யர்களுக்கும் மிகப் பெரிய வரமாகும். மாணவ ர்க ளுக்கு தேவையான எல்லா விதமான தகவல்களையும் சில நொடிகளில் திரையில் கொண்டு வர இணையம் உதவுகிறது. ஆனால் இத்தகைய ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் ஒருசில தனியார் பள்ளிகள் மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறைகளைப் பயன்படுத்தி கற்பிக்கின்றன.

    இந்தநிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் அரசின் திட்டத்தில் ஒரு மைல் கல்லாக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரம் நகராட்சி ஆரம்ப மற்றும் நடுநிலை ப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உடுமலை நகராட்சி 26 வது வார்டு டி.வி பட்டினம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொட ங்கப்ப ட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த வகுப்பறையை தி.மு.க. நகர செயலாளர் வேலுச்சாமி, நகர்மன்றத் தலைவர் மத்தீன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும் ஸ்மார்ட் வகுப்ப றைகள் இயக்கம் மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி.குமார்,நகர் மன்ற உறுப்பினர் அஸ்வதி விக்ரம்,நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×