search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்டஅள்ளி அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு
    X

    மாரண்டஅள்ளி அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு

    • எம்.பி. செந்தில்குமார் தனது எம்.பி. நிதியிலிருந்து புதிய ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துக் கொடுத்தார்.
    • எம்.பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மாணவிகளிடையே உரையாற்றினார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் படிப்பு திறனை அதிகரிக்கவும், கல்வித்திறனை மேம்படுத்தவும், எம்.பி. செந்தில்குமார் தனது எம்.பி. நிதியிலிருந்து புதிய ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துக் கொடுத்தார். அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் எம்.பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மாணவிகளிடையே உரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்க சரவணன், தலைமை ஆசிரியை சுமதி மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×