search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீஹரி கோட்டா"

    • இந்திய விண்வெளி திட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.
    • காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிட்கோ தொழிற் பேட்டையில் பிரபல தனியார் நிறுவனத்தின் கனரக லாரி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவிற்கு தேவைப்படும் அதிநவீன கனரக லாரியை தயாரித்து சாலை மார்க்கமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொழிற்சா லையின் தலைமை செயல் அலுவலர் தெரிவித்தாவது:-

    இந்திய விண்வெளிதிட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.

    அதன் பிறகு அவற்றை இஸ்ரோவின் ஏவுதளமான ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்ல இந்த பிரம்மாண்ட லாரி பயன்படும்.

    லாரியின் விலை ரூ.1.40 கோடி ஆகும். இந்த லாரி 74 அடிநீளமும், 17.5 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது. இதன் மேற்புரம் தானாக திறந்து கொள்ளும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வாகனம் எந்த பக்கமும் தானே திரும்பிக்கொள்ளும் சிறப்பு ஸ்டேரிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தின் மூலம் மகேந்திரகிரியில் தயாராகும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அனுப்ப முடியும்.

    மழை உள்ளிட்ட அனைத்து வித பாதிப்புகளையும் தாங்கி உள்ளே இருக்கும் ராக்கெட்டை பாதுகாப்புடன் கொண்டுச் செல்வதற்காக முழுவதும் இந்திய தொழில்நுட்பத்துடன் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு இரு சிறிய ரக லாரிகளை அனுப்பி வைத்தோம். தற்போது மகேந்திரகிரிக்கு மிகவும் நவீன முறையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட லாரியை உருவாக்கி அனுப்பி வைத்துள்ளோம்.

    மேலும் திருவனந்தபுரம் தும்பாவில் உள்ள இஸ்ரோ தளத்திற்கு ஒரு லாரி தயாரிக்கும் ஒப்பந்தம் பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன என்றார்.

    இந்நிலையில் லாரி அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மகேந்திரகிரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி லாரி நேற்று மாலை அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் சென்றது. லாரி மிகவும் நீளமாகவும், அகலமாகவும் இருந்ததால் அந்த வழியில் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நீண்ட விடுப்பில் சென்ற சிந்தாமணி கடந்த 20-ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பினார்
    • உத்தரபிரதேசத்தை சேர்ந்த விகாசிங் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் மகாஸ்மந்த் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (வயது 29). விண்வெளி ஆராய்ச்சி மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    நீண்ட விடுப்பில் சென்ற சிந்தாமணி கடந்த 20-ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பினார். நேற்று பணியில் இருந்த அவர் இரவு 7.30 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு பேசினார்.

    பின்னர் அவரிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படை பிரிவினர் சிந்தாமணி பணியில் இருந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள மரத்தில் சிந்தாமணி தூக்கில் தொங்கினார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிந்தாமணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விகாசிங் (வயது 30). இவர் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.

    விண்வெளி ஆராய்ச்சி மைய வாயிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேற்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வேலை செய்து கொண்டு இருந்தார்.

    இன்று அதிகாலை பணி முடியும் நேரத்தில் விகாசிங் தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்து நெற்றி பொட்டில் வைத்து சுட்டார்.

    இதில் குண்டு பாய்ந்து தலையின் பின்பக்கம் வெளியேறியது. ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து விகாசிங் பரிதாபமாக இறந்தார்.

    துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்த போலீசார் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணி சுமை காரணமாக 2 பாதுகாப்பு படை போலீசார் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×