search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராக்கெட்"

    • 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' அக்னிபான் ராக்கெட்டை தயாரித்தது.
    • செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக ராக்கெட் ஏவப்பட இருந்தது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது.

    இந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    அதில் இருந்து முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட, 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' தயாரித்த 'அக்னிபான்' ராக்கெட் நாளை காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அக்னிபான் ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தொழில்நுட்ப கோளாறு சீரான பிறகு, விண்ணில் ஏவப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய விண்வெளி திட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.
    • காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிட்கோ தொழிற் பேட்டையில் பிரபல தனியார் நிறுவனத்தின் கனரக லாரி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவிற்கு தேவைப்படும் அதிநவீன கனரக லாரியை தயாரித்து சாலை மார்க்கமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொழிற்சா லையின் தலைமை செயல் அலுவலர் தெரிவித்தாவது:-

    இந்திய விண்வெளிதிட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.

    அதன் பிறகு அவற்றை இஸ்ரோவின் ஏவுதளமான ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்ல இந்த பிரம்மாண்ட லாரி பயன்படும்.

    லாரியின் விலை ரூ.1.40 கோடி ஆகும். இந்த லாரி 74 அடிநீளமும், 17.5 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது. இதன் மேற்புரம் தானாக திறந்து கொள்ளும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வாகனம் எந்த பக்கமும் தானே திரும்பிக்கொள்ளும் சிறப்பு ஸ்டேரிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தின் மூலம் மகேந்திரகிரியில் தயாராகும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அனுப்ப முடியும்.

    மழை உள்ளிட்ட அனைத்து வித பாதிப்புகளையும் தாங்கி உள்ளே இருக்கும் ராக்கெட்டை பாதுகாப்புடன் கொண்டுச் செல்வதற்காக முழுவதும் இந்திய தொழில்நுட்பத்துடன் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு இரு சிறிய ரக லாரிகளை அனுப்பி வைத்தோம். தற்போது மகேந்திரகிரிக்கு மிகவும் நவீன முறையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட லாரியை உருவாக்கி அனுப்பி வைத்துள்ளோம்.

    மேலும் திருவனந்தபுரம் தும்பாவில் உள்ள இஸ்ரோ தளத்திற்கு ஒரு லாரி தயாரிக்கும் ஒப்பந்தம் பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன என்றார்.

    இந்நிலையில் லாரி அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மகேந்திரகிரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி லாரி நேற்று மாலை அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் சென்றது. லாரி மிகவும் நீளமாகவும், அகலமாகவும் இருந்ததால் அந்த வழியில் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது.
    • பூமிக்கு திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டது.

    உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் "சூப்பர் ஹெவி" எனப்படும் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்துள்ளது.

    33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது. இந்த ராக்கெட் சோதனை இரண்டு முறை தோல்வியில் முடிந்தது. அதில் ஏற்பட்ட தவறுகள் சரிசெய்யப்பட்டன.

    இந்த நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் தெற்கு டெக்சாசின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதை நேரலையில் 35 லட்சம் பேர் பார்த்தனர். வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் குறிப்பிட்ட இலக்கை சென்றடைந்தது. பின்னர் பூமிக்கு திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டது.

    ஆனால் மீண்டும் வளி மண்டலத்தில் நுழைந்த போது ராக்கெட் திடீரென்று தொடர்பை இழந்தது. இறுதி இலக்கை அடைவதற்கு முன்பே தொடர்பை இழந்தது. கீழ்-நிலை பூஸ்டர் வெற்றிகரமாக நீரில் தரையிறங்குவதில் தோல்வி்யடைந்தது.

    இருந்தபோதிலும் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப்பின் மூன்றாவது ஏவுகணை சோதனையில் அதன் பல நோக்கங்களை பூர்த்தி செய்ய முடிந்ததாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

    • ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
    • மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

    டோக்கியோ:

    ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது.

    ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

    ஆனால் ராக்கெட் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென்று நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் வானில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. ராக்கெட்டின் பாகங்கள் கீழே விழுந்ததில் சில இடங்களில் தீப்பிடித்தது, தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.


    ஜப்பானில் முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஜப்பானில் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெற்றிருக்கும்.

    ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து அந்நிறுவனம் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

    • மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
    • எள்ளுவிளை கிராமங்களும் அடங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் ஏவும் பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு இடம் தேர்வு விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதியை மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி கிழக்கு கடற்கரை சாலையான தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி சாலையை ஒட்டியுள்ள படுக்கபத்து மற்றும் சாத்தான்குளம் தாலுகாவில் பள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் தாலுகாவில் மாதவன்குறிச்சியை உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இதன் வடக்கு எல்லையாக தாண்டவன்காடு, நாராயணபுரம் மற்றும் மாதவன்குறிச்சி கிராமங்களும், தெற்கே மன்னார் வளைகுடா, கிழக்கே மன்னார் வளைகுடா மற்றும் அமரபுரம், மணப்பாடு கிராமங்களும், மேற்கே படுக்கபத்து மற்றும் எள்ளுவிளை கிராமங்களும் அடங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • டிராகன் விண்கலம் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள்.

    அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளன.

    பூமியில் இருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் இயங்கி வரும் இந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் பிற உறுப்பு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்து, விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வருகிறது.

    கடைசியாக கடந்த மார்ச் மாதம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் 6 மாத பணிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

    இதையடுத்து அவர்களுக்கு மாற்றாக புதிய விண்வெளி வீரர்கள் குழுவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து நாசா மேற்கொண்டது.

    அதன்படி, நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்களுடன் பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    அதனை தொடர்ந்து, டிராகன் விண்கலம் சுற்றுப்பாதையில் நுழைந்தது.

    இந்நிலையில், பூமியில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்களுடன் அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

    இந்த 4 விண்வெளி வீரர்களும் 6 மாத காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராக்கெட் ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும்.
    • பணிகளை இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் அக்னிகுல் ஸ்டார்ட் அப் நிறுவனம் 3டி பிரிண்டிங் முறையிலான 'அக்னிபான்' என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

    இஸ்ரோ மூலம் பெரிய அளவிலான செயற்கை கோள்கள் அனுப்பி வரும் நிலையில் அக்னிபான் ராக்கெட் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான சிறிய அளவிலான செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ முடியும்.

    விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தவும் முடியும். இதனால் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை ஏவலாம். இதற்கான ராக்கெட் ஏவுதளம் (அக்னிகுல்) இஸ்ரோவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த ராக்கெட்டின் 2 பாகங்கள் தயார் செய்யப்பட்டு பரிசோதனைகள் முடிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் பாகம் 3டி பிரிண்டிங் முறையில் தயார் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னையை தளமாக கொண்ட ராக்கெட் ஸ்டார்ட் அப் அக்னி குல் காஸ்மோஸ் நிறுவனம், ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள தனது ஏவு தளத்தில் அதன் தொழில்நுட்ப சோதனையின் ஒரு பகுதியாக ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் செயல் முறையை தொடங்கி உள்ளது.

    இது அக்னிலெட் எந்திரத்தால் இயக்கப்படும் சிங்கிள் ஸ்டேஜ் லான்ஜ் வாகனம் மற்றும் முற்றிலும் 3டி அச்சிடப்பட்ட, சிங்கிள் பீஸ், 6 கே.என். அறை- கிரையோ ஜெனிக் எந்திரம் ஆகும். இந்த ராக்கெட் ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும். இந்த பணிகளை இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் அக்னி பான் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    • சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அபாயகரமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்.

    மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த மர்ம பொருள் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. ராக்கெட் பாகம் போன்று உள்ளது.

    • 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.
    • நாளை பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

    சென்னை :

    'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

    'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.

    பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து,

    நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான 'சந்திரயான்-3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
    • பணிகள் நிறைவு பெற்று சந்திரயான்-3 விண்கலம் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2.35 மணிக்கு நிலவுக்கு ஏவப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவு குறித்து ஆய்வு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

    இதில் சந்திரயான்-1 என்ற விண்கலம் 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம், நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய திட்டமிட்ட இஸ்ரோ, கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. இதில் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது. இதனால் சந்திரயான்-2 திட்டம் வெற்றி பெறவில்லை.

    இதையடுத்து சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இப்பணிகள் நிறைவு பெற்று சந்திரயான்-3 விண்கலம் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2.35 மணிக்கு நிலவுக்கு ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா வில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.ஏ. ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்பட உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டமைப்பு பணிகள் கடந்த வாரமே நிறைவடைந்த நிலையில் தொழில் நுட்ப ரீதியிலான பரிசோதனைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மின்னூட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த இரண்டு நாட்களில் கவுண்டவுன் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சந்திரயான்-2 திட்டத்தின் வெற்றி அடிப்படையிலான வடிவமைப்பிற்கு பதிலாக சந்திரயான்-3 திட்டத்தில் தோல்வி அடிப்படையிலான வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:-

    சந்திரயான்-3 விண்கலம், அனைத்து வகையிலும் வெற்றிகரமாக திட்ட மிட்டபடி ஏவப்பட்டாலும், நிலவில் தரையிறங்குவதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. அந்த திட்டம் முழுவதும் வெற்றியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.

    ஆனால் தரையிறங்குவதில் தோல்வியடைந்தது. சந்திரயான்-3 விண்கலத்தை முழுவதும் தோல்வியின் அடிப்படையில் உருவாக்கியுள்ளோம். சென்சார் செயலிழப்பு, இயந்திர செயலிழப்பு, கணக்கீடு தோல்வி என பல தோல்விகளை நாங்கள் பார்த்தோம்.

    எனவே தோல்வி எதுவாக இருந்தாலும், அது தேவையான வேகத்திலும், குறிப்பிட இடத்திலும் தரையிறங்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

    சரியாக தரையிறங்காவிட்டால் என்ன செய்வது, குறிப்பிட்ட இடத்தில் இறங்க முடியாவிட்டால் என்ன செய்வது, எரிபொருள் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என தோல்விகள் எந்தெந்த வகையில் உருவாகும் என்பதை அடிப்படையாக வைத்து அதற்கு தீர்வு காணும் வகையில் வடிவமைத்துள்ளோம். தோல்வியின் அடிப்படையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் திட்டம் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

    முந்தைய விண்கலத்தை குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கும் வகையில் வடிவமைத்தோம். தற்போது எந்த இடத்திலும் தரை இறங்கும் வகையில் திட்ட மிட்டுள்ளோம்.

    தரையிறங்கும் பகுதியை 500 மீட்டருக்கு 500 மீட்டரிலிருந்து 4 கிலோ மீட்டருக்கு 2.5 கிலோ மீட்டராக உயர்த்தி உள்ளோம். இதனால் எங்கும் தரையிறங்கலாம். எனவே ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்டுப்படுத்ததாது.

    சந்திரயான்-3 விண்கலம் அதிக எரிபொருளை கொண்டுள்ளது. விக்ரம் லேண்டரில் தற்போது கூடுதல் சோலார் பேனல்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா நாசாவுடன் இணைந்து ‘நிசார்’ என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
    • அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படும்.

    ஸ்ரீஹரிகோட்டா :

    ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    'ஜி.எஸ்.எல்.வி. எப்-10' ராக்கெட் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டது. கிரையோஜெனிக் நிலையில் கசிவு இருந்ததால்தான் தோல்வி ஏற்பட்டதாக அந்த குழு அறிக்கை அளித்தது.

    அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதன் மூலம் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. 'என்.வி.எஸ்.' 2-ம் தலைமுறையை மையமாக கொண்டு ஏவப்பட்டு உள்ளது. இது புவிவட்டப் பாதையை சேர்ந்தது. இதில் இருந்து திறம்பட, துல்லியமாக தகவல்களை பெற முடியும்.

    இந்த 'என்.வி.எஸ்.' செயற்கைகோள் ரகத்தில் மொத்தம் 5 செயற்கைகோள் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளன. மீதமுள்ள 4 செயற்கைகோள்கள் 6 மாதத்துக்கு ஒன்று வீதம் அனுப்பப்பட உள்ளன. இந்த செயற்கைகோள் மூலம் நம்நாட்டுக்கு தேவையான தகவல்களை பெறுவதுடன் வரும் காலங்களில் அதிக அளவில் வாய்ப்புகளை பெறமுடியும்.

    அடுத்து 'ஜி.எஸ்.எல்.வி.' ரகத்தில் 'இன்சாட் 3டி.எஸ்.' என்ற செயற்கைகோள் காலநிலை மாற்றம் குறித்து ஆராய விண்ணில் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல், இந்தியா நாசாவுடன் இணைந்து 'நிசார்' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    தொடர்ந்து 'ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3', 'எஸ்.எஸ்.எல்.வி.', ககன்யான் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    மீண்டும் பயன்படுத்தப்படும் ராக்கெட் செயல் வடிவத்துக்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், இந்தியாவுக்கும், இந்தியர்களுக்குமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

    தற்போது அனுப்பப்பட்டுள்ள 'எல் 1 பேண்ட்' பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வரைபடம், வழிகாட்டி தகவல்களை பெற முடியும். தொடர்ந்து நிலவை ஆய்வு செய்யும் 'சந்திரயான்-3' திட்டம் ஜூலை மாதம் செயல்படுத்தப்பட உள்ளது.

    குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தை பொறுத்தவரை 99 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவுற்றது. இங்கிருந்து தனியார் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடு்க்கப்படும். 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி தந்துள்ளது. வடிவமைப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில் கட்டுமானத்துக்கான டெண்டர் கோரப்பட உள்ளது.

    2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும். அதற்குப் பிறகு ராக்கெட் இங்கிருந்து ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து ஜூலை மாதம் மாதிரி விண்கலம் ஒன்று புவியில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் அனுப்பி பாதுகாப்பாக தரையிறக்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.

    அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பணியாளர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    இந்தியாவின் இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோளான என்.வி.எஸ். 01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளானது ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள் மூலம் தரை, கடல், வான்வெளி போக்குவரத்து குறித்தும், பேரிடர் மேலாண்மை குறித்தும் தகவல்களை பெற முடியும். குறிப்பாக இந்த ராக்கெட், முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6 வது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் என்பது தனிச்சிறப்பு.

    மேலும் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட்டை தயாரித்ததும், செயற்கைக்கோளுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதும், நிலைநிறுத்தியதும் மேலும் ஒரு மைல்கல்.

    மத்திய அரசு-இஸ்ரோ விஞ்ஞானிகளையும், பணியாளர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள், சான்றுகள், ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் வாழ்வு சிறக்க துணை நிற்க வேண்டும். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பணியாளர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×