search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷாருக்கான்"

    • ஷாருக்கானின் மகள் சுஹானா கான்.
    • இவர் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்ற மகனும் சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர்.


    இதில் ஆர்யன் கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இவரது மகள் சுஹானா கான் ஜோயா அக்தர் இயக்கியிருக்கும் 'ஆர்ச்சீஸ்' படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் சுற்று சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நடிகை சுஹானா கானிடம் நடிகை ஆலியாபட் தேசிய விருது வழங்கும் விழாவில் தனது திருமண உடையை அணிந்திருந்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு சுஹானா, "புதிய உடைகளை தயாரிக்கும் பொழுது எவ்வளவு கழிவுகள் வெளியாகுகிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஆலியாவின் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக இருந்தது.


    ஆலியாவே ஏற்கனவே அணிந்த உடையை உடுத்துகிறார் என்றால் நாமும் பார்ட்டி அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது ஆலியா பட்டை பின்பற்றி ஏற்கனவே அணிந்த உடையை அணியலாம்." என்று ஆலியாவை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

    நடிகை ஆலியா பட் 'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ’ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டியது.
    • ஷாருக்கான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டியது.


    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ஷாருக்கான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் 'ஜவான்' படத்தை Extended Cut-வுடன் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர்.


    • அட்லீ ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.


    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் அட்லீ வாயில் சுருட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் தொடர் வசூல் சாதனை படைத்து வருகிறது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.


    ஜவான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1117 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஜவானின் தொடர் வசூல் சாதனை ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.




    • பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான்.
    • இவர் நடித்த ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை குவித்தது.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'பதான்', 'ஜவான்' என இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படங்களின் வெற்றி மூலம் ஷாருக்கான் ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி வசூலை கொடுத்த நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


    இந்த நிலையில் சமீபகாலமாக நடிகர் ஷாருக்கானுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக அடிக்கடி மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு 6 கமாண்டோக்கள், 4 போலீசார் உள்ளிட்ட 11 பேர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

    அவரது பங்களா முன்பு 4 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எம்பி-5 எந்திர துப்பாக்கி. ஏகே- 47 ரக துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருப்பார்கள். இவர்கள் மகராஷ்டிரா மாநில போலீசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள். இதற்கு முன்பு ஷாருக்கானுக்கு 2 போலீசார் மட்டுமே பாதுகாப்பு வழங்கினார்கள்.


    கடந்த 5-ந்தேதி மாநில உள்துறை, மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்ட துறைகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் நடிகர் ஷாருக்கானுக்கு சமீபத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு அடுத்த உயர்மட்ட குழு பரிந்துரை மற்றும் மறு ஆய்வுக்குழு முடிவு வரும் வரை அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ, மெர்சல், தெறி, பிகில் என விஜய்க்கு பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான 'ஜவான்' திரைப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து ஒட்டுமொத்த பாலிவுட் படங்களின் வசூலை ஓரம்கட்டியுள்ளது. இந்த வெற்றி மூலம் அட்லீ உலக புகழ் பெற்ற இயக்குனராக இடம்பெற்றுள்ளார்.



    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அட்லீ, விஜய் மற்றும் ஷாருக்கான் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, விஜய் - ஷாருக்கான் இருவரில், ஒருவர் என்னுடைய அம்மா. ஒருவர் என்னுடைய மனைவி. இரண்டு பேர் இல்லாமலும் நம்மால் வாழமுடியாது. இன்று நான் இங்கு இருப்பதற்கு காரணம் விஜய் சார் தான்.


    அவர் எனக்கு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தார். நான் அவருக்கு வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை மிகவும் நம்பினார். ஷாருக்கான் படம் நடிக்க நினைத்தால் உலகத்தில் உள்ள எத்தனையோ இயக்குனர்கள் வருவார்கள். ஆனால் அவர் என்னை நம்பினார். இன்றுவரை அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவரது நம்பிக்கைதான் என்னை மிகுந்த பொறுப்புடனும் அன்புடனும் படத்தை செய்ய வைத்தது" என்று பேசினார்.

    • அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜவான்'.
    • இப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.


    ஜவான் போஸ்டர்

    இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாலிவுட்டின் ஒட்டு மொத்த படங்களின் வசூலை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • ’ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை கடந்துள்ளது.
    • இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.


    இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இந்த வெற்றியை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் விஜய் ரசிகர்கள் 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், "வாழ்த்துகளுக்கு நன்றி. விஜய்யின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். லவ் யூ விஜய்" என்று குறிப்பிட்டிருந்தார்.


    இந்நிலையில், இந்த டுவீட்டை ரீடுவீட் செய்துள்ள நடிகர் விஜய், "ஷாருக்கான், அட்லீ மற்றும் ஜவான் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.


    இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இந்த வெற்றியை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஷாருக்கான் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.


    இதில் விஜய் ரசிகர்கள் 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், "வாழ்த்துகளுக்கு நன்றி. விஜய்யின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். லவ் யூ விஜய்" என்று பதிவிட்டுள்ளார்.


    • ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.



    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் உல அளவில் ரூ.1004 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் வீடியோவை பகிர்ந்து அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படத்தில் பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.


    ஜவான் போஸ்டர்

    இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இப்படத்தின் வசூல் ரூ.1,000 கோடியை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, 'ஜவான்' திரைப்படம் ரூ.953 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.


    இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இதுவரை ரூ.900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில், ஒருவர் 'ஜவான்' படத்தின் கடைசி பாடலை பகிர்ந்து, "ஹேய், விக்ரம் ரத்தோர், நீ ஆசாத் மற்றும் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதை ஐஸ்வர்யா சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்லுவாய்? என்று கேள்வி எழுப்பினார்."


    அதற்கு ஷாருக்கான், "நான் மிகவும் ரொமாண்டிக் மற்றும் மனதளவில் பெண்களுக்கு அதிகமாக மதிப்பு கொடுப்பவன் என்று அவளுக்கு தெரியும். நான் செய்யும் குறும்பு தனங்களால் அவள் மகிழ்ச்சியடைவாள். நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    ×