என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
ஒருவர் என்னுடைய அம்மா.. ஒருவர் என்னுடைய மனைவி.. விஜய்- ஷாருக்கான் குறித்து அட்லீ நெகிழ்ச்சி
- அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ, மெர்சல், தெறி, பிகில் என விஜய்க்கு பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான 'ஜவான்' திரைப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து ஒட்டுமொத்த பாலிவுட் படங்களின் வசூலை ஓரம்கட்டியுள்ளது. இந்த வெற்றி மூலம் அட்லீ உலக புகழ் பெற்ற இயக்குனராக இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அட்லீ, விஜய் மற்றும் ஷாருக்கான் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, விஜய் - ஷாருக்கான் இருவரில், ஒருவர் என்னுடைய அம்மா. ஒருவர் என்னுடைய மனைவி. இரண்டு பேர் இல்லாமலும் நம்மால் வாழமுடியாது. இன்று நான் இங்கு இருப்பதற்கு காரணம் விஜய் சார் தான்.
அவர் எனக்கு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தார். நான் அவருக்கு வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை மிகவும் நம்பினார். ஷாருக்கான் படம் நடிக்க நினைத்தால் உலகத்தில் உள்ள எத்தனையோ இயக்குனர்கள் வருவார்கள். ஆனால் அவர் என்னை நம்பினார். இன்றுவரை அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவரது நம்பிக்கைதான் என்னை மிகுந்த பொறுப்புடனும் அன்புடனும் படத்தை செய்ய வைத்தது" என்று பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்