search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைநிறுத்தம்"

    • தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடின.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1.35 லட்சம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, அகவிலைப்படி வழங்குதல், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி. சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஒருசில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    பொதுமக்கள் உள்ளூர், வெளியூர் பயணம் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் அசு முழு அளவில் பஸ்களை இயக்கி வருகிறது.

    சென்னையில் இருந்து வழக்கமாக பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்பட்டன.

    அதேபோல வெளியூர்களிலும் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் வழக்கம் போல பஸ்களில் பயணித்தனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. மேலும் 12-ந் தேதி முதல் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு டிரைவர், கண்டக்டர்கள் முழு அளவில் பணியில் இருக்க வேண்டும்.

    அதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்ட களத்தில் தீவிரமாக உள்ளன.

    இதற்கிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர், பஸ்களை மறிப்போர், ஊழியர்களை தாக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சில தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் தொடர்பு கொண்டு பணிக்கு திரும்புமாறு கூறி வருகின்றனர்.

    ஆனாலும் அவர்கள் பிடிவாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பஸ் நிலையங்களுக்கு சென்று பஸ்களை இயக்க விடாமல் மறிப்பது, ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையொட்டி ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பட்டியல் தயாரித்து அவர்களுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு போக்குவரத்து கழக நிர்வாகத்தின்கீழ் செயல்படும் டெப்போக்களில் எத்தனை பேர் வேலைக்கு வரவில்லை என்ற விவரங்களை சேகரிக்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    அதன்படி 8 போக்குவரத்து கழகங்களிலும் வேலைக்கு வராத ஊழியர்கள் பெயர் விவரங்கள் தற்போது சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

    விரைவில் அவர்களுககு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 'நோ ஒர்க், நோ பே' என்ற அடிப்படையில் ஸ்டிரகை்கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் ரத்து செய்வதோடு துறை ரீதியான சட்ட நடவடிக்கையும் பாயும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மிக குறைந்த அளவில் தான் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் மேலாண்மை இயக்குனர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

    • தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பஸ் இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறைபிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீத வரை மாநகர பஸ்கள் இயக்கக்கப்பட்டுள்ளன.
    • பல இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியிருப்பதாவது:

    * சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இன்று வழக்கம்போல் பஸ்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன.

    * சென்னை மாநகரில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீத வரை மாநகர பஸ்கள் இயக்கக்கப்பட்டுள்ளன.

    * பல இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    * 2025 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய சூழலில் 2263 பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    • தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும், ஐ.என்.டி.யூ.சி. சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
    • சென்னையில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே சமயம் பெரும்பாலான தொழிலாளர்களை கொண்ட தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும், ஐ.என்.டி.யூ.சி. சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

    இதனால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடியதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மாநிலம் முழுவதும் 96 சதவீத பஸ்கள் ஓடியதாக அவர்கள் கூறியுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் 97 சதவீத பஸ்கள் ஓடியதாக அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீதம் வரை மாநகர பஸ்கள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    • பஸ்சில் இருந்த ஒரு சில பயணிகள் கைகளை கோர்த்து சங்கிலி போன்ற அமைப்பு ஏற்படுத்தி அங்கிருந்து வெளியேறினர்.
    • மூதாட்டி ஒருவர் அந்தப் பஸ்சிற்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இதனை தற்காலிக டிரைவர் மணி கண்டன் பஸ்சை ஓட்டி சென்றார். இந்த பஸ் திண்டிவனம் இந்திரா காந்தி பழைய பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக அங்குள்ள தரைப் பாலத்தை கடந்த பொழுது ஏரியில் திறக்கப்பட்ட உபரிநீர் அதிகரித்து சாலையில் ஓடியது. இதில் பஸ் பழுதாகி வெள்ளநீரில் சிக்கிக் கொண்டது.

    பஸ்சில் இருந்த ஒரு சில பயணிகள் கைகளை கோர்த்து சங்கிலி போன்ற அமைப்பு ஏற்படுத்தி அங்கிருந்து வெளியேறினர். மூதாட்டி ஒருவர் அந்தப் பஸ்சிற்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

    கிடங்கல் ஏரியில் நீர் அதிகரித்ததால் போலீசார் அப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் வேன் டிரைவர்கள் வாகனத்தை கழுவுவதற்காக தடுப்புகளை அகற்றியதாக கூறப்படுகிறது.

    இதனை அறியாத பஸ் டிரைவர் தரைப்பாலத்தின் வழியே வந்ததாலும், நீர்வரத்து அதிகரிப்பாலும், பஸ் பழுதாகி நீரில் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற மாதத்திற்கு சுமார் ரூ.20 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும்.
    • போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரிகள் அல்ல.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    15-ம் ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.


    வேலை நிறுத்தத்தால் பாதிப்பு இல்லை என்றும், மாநிலம் முழுவதும் 93.90 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும் கள நிலைமைவேறாக உள்ளது. நகரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட, ஊரகப்பகுதிகளில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற மாதத்திற்கு சுமார் ரூ.20 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும். இந்தக் கோரிக்கையைக் கூட நிதிநிலையை காரணம் காட்டி நிறைவேற்ற மறுப்பது நியாயமல்ல.


    போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரிகள் அல்ல. அவர்களின் ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றி மற்ற கோரிக்கைகள் தொடர்பாக வாக்குறுதி அளித்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேட்டுப்பாளையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொழிறங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தாலும் தமிழகத்தில் வழக்கம் போல பஸ்கள் இயங்கின.

    கோவை:

    தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலனை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன.

    இதையடுத்து தமிழக அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு சிரமமின்றி அரசு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்து இருந்தது.

    தொழிறங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தி வந்தாலும் தமிழகத்தில் வழக்கம் போல பஸ்கள் இயங்கின. அதன்படி கோவை மாவட்டத்திலும் வழக்கம் போல இன்று பஸ்கள் இயங்கின.

    கோவை மாவட்டத்தில் கோவை உப்பிலிபாளையம், கருமத்தம்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தலைமை பணிமனை, சுங்கம் 1,2, உக்கடம் 1,2, பொள்ளாச்சி 1,2,3, வால்பாறை என மொத்தம் 17 டெப்போக்கள் உள்ளன.


    இந்த டெப்போக்களில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் மட்டும் 602 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சேலம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட அனைத்து வெளியூர்களுக்கும் 349 பஸ்கள் என மொத்தம் கோவை மாவட்டத்தில் இருந்து 951 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்து இருந்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம் விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் காலை முதல் வழக்கம் போல பஸ்கள் இயங்கின.

    பஸ்கள் வழக்கம் போல இயங்கியதால் மக்களும் எந்தவித சிரமமும் இன்றி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

    பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் என அனைவரும் எந்தவித சிரமமும் இன்றி பஸ்களில் பயணம் செய்தனர்.

    வால்பாறையில் இருந்து அங்குள்ள எஸ்டேட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு 38 டவுன் பஸ்களும், பொள்ளாச்சி, கோவை, பழனி, சேலம், திருப்பூர், மன்னார்காடு போன்ற பகுதிகளுக்கு 6 பஸ்களும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் இன்று காலை வழக்கம் போல பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

    கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்களும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் என 43 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 43 பஸ்களும் வழக்கம் போல அதிகாலை முதலே இயங்கின.

    இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதிகளில் 50 சதவீத பஸ்களும், அன்னூரில் 90 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டன. காரமடை, சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் வழக்கம் போல பஸ்கள் இயங்கியதால் மக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணித்தனர்.

    தொழிற்சங்கங்கள் போராட்டத்தையொட்டி, காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து துறையினர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 6 மணி நிலவரப்படிக்கு புறப்பட்ட வேண்டிய 581 பஸ்களும் வழக்கம் போல புறப்பட்டு சென்றன. பஸ்கள் இயங்குவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம். பஸ் நிலையத்திற்கு வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாம் என்றனர்.

    நீலகிரி மாவட்டத்திலும் வழக்கம் போல பஸ்கள் இயங்கியது. ஊட்டியில் இருந்து குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளுக்கும், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் வழக்கம் போல பஸ்கள் இயங்கின. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் இருந்து வழக்கம் போல பஸ்கள் இயங்கியது.

    போராட்டத்தையொட்டி அனைத்து பஸ் நிலையங்கள், பணிமனைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பஸ்களை வழக்கம் போல இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    • சில தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர்களுக்கு விடுப்பு கொடுக்காமல் பணியில் ஈடுபடுத்தி வருகிறது.

    சேலம்:

    ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் காலி பணியிடங்கனை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதற்கிடையே அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளிடையே நேற்று சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்தில் இருந்து தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்பட சில சங்கங்கள் விலகுவதாக அறிவித்தன.

    ஆனாலும் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தி.க. தொழிற்சங்கம் உள்பட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து பஸ்களை வழக்கம் போல இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி 50 சதவீத மாற்று டிரைவர்கள், தனியார் பஸ் டிரைவர்கள், டெம்போ டிரைவர்கள் உள்பட பலரையும் நியமித்து பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 300 பஸ்களும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 180 பஸ்களும் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல இயக்கப்படுகிறது.

    இதே போல சேலம் புறநகர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இயக்கப்படும் 600 பஸ்களும் வழக்கம் போல இயக்கப்படுகிறது. இதையொட்டி பஸ் நிலையங்கள், டெப்போக்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் பஸ்கள் இயங்காது என்று கூறப்பட்டதால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது. ஆனாலும் குறைந்த பயணிகளுடன் பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதையொட்டி பஸ் நிலையங்கள், டெப்போக்கள் முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சென்ன கிருஷ்ணன் தலைமையில் சேலம் மெய்யனூர் போக்குவரத்து கழக டெப்போ நுழைவு வாயில் முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதே போல 2 மாவட்டங்களிலும் டெப்போக்கள் முன்பு டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து சி.ஐ.டி .யு. போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தி.க.தொழிற்சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 50 சதவீத தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    ஆனால் அரசு சில தொ.மு.ச. உள்பட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர்களுக்கு விடுப்பு கொடுக்காமல் பணியில் ஈடுபடுத்தி வருகிறது. மேலும் தனியார் பஸ் டிரைவர்கள், டெம்போ டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்கி வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கயத்தில் 80 பஸ்களில் 62 பஸ்களும், தாராபுரத்தல் 76 பஸ்களில் 61 பஸ்களும், உடுமலையில் 94 பஸ்களில் 92 பஸ்களும் இயக்கப்பட்டன.
    • திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட பழனி-1 பணிமனையில் 47 பஸ்களில் 43 பஸ்களும், பழனி 2ல் 37 பஸ்களில் 26 பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தன. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    அதன்படி சி.ஐ.டி.யு. தலைமையிலான கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    திருப்பூர் மாநகரில் இன்று அரசு பஸ்கள் ஓடாது என்று பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டன. தொ.மு.ச. தொழிற்சங்க ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்று பஸ்களில் நோட்டீஸ் ஒட்டினர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று பஸ்கள் இயக்கப்படுமா, இயக்கப்படாதா? என்பது தெரியாததால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளானார்கள்.

    இதனால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் நேற்றிரவு தாங்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு பயணித்தனர். இதனால் நேற்று இரவு திருப்பூர் மத்திய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வேண்டியவர்கள் முன்கூட்டியே நேற்று ஊருக்கு புறப்பட்டு சென்றதை காண முடிந்தது.

    இந்தநிலையில் பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    அதன்படி இன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பூர் பணிமனை 1-ல் மொத்தமுள்ள 88 பஸ்களில் 54 பஸ்கள் இயக்கப்பட்டன. பணிமனை 2-ல் 57 பஸ்களில் 41 பஸ்கள் இயக்கப்பட்டன. பல்லடம் பணிமனையில் இருந்து 70 பஸ்களில் 67 பஸ்களும், காங்கயத்தில் 80 பஸ்களில் 62 பஸ்களும், தாராபுரத்தல் 76 பஸ்களில் 61 பஸ்களும், உடுமலையில் 94 பஸ்களில் 92 பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட பழனி-1 பணிமனையில் 47 பஸ்களில் 43 பஸ்களும், பழனி 2ல் 37 பஸ்களில் 26 பஸ்களும் இயக்கப்பட்டன. திருப்பூர் மண்டலம் முழுவதும் மொத்தம் 549 பஸ்களில் 446 பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 90.36 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆளும் கட்சிக்கு ஆதரவான தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
    • பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.

    இதையடுத்து அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. நிதி சுமை காரணமாக பொங்கலுக்கு பிறகு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதை ஏற்க மறுத்தனர்.

    குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் ஆகிய முக்கியமான பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதால் அதனை மட்டுமாவது நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

    இது தொடர்பாக நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருக்கும் இடையே எந்த உடன்பாடும் ஏற்படாததால் இன்று (9-ந்தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

    அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தன. அதன்படி நேற்று இரவு முதலே போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சில சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் குதித்தன.

    ஆளும் கட்சிக்கு ஆதரவான தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சார்ந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    பொங்கல் பண்டிகை காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களின் வெளியூர் பயணம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. முன் பதிவு செய்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணத்தை தொடர அரசு பஸ்களை முழுமையாக இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் முழு அளவில் பஸ்களை இயக்க நேற்று இரவு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 8 போக்குவரத்து கழகங்களிலும் உள்ள பஸ்களை முழு அளவில் இயக்க அனைத்து ஊழியர்களையும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

    விடுப்பில் இருந்தவர்கள் வேலைக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று அரசு பஸ்கள் முழுமையாக இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்தனர்.

    அதன்படி இன்று அதிகாலை 5 மணி முதல் அரசு பஸ்கள் டெப்போக்களில் இருந்து ஒவ்வொன்றாக புறப்பட்டன. தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல சேவையை தொடங்கின.

    அனைத்து பணிமனைகளுக்கும் இன்று அதிகாலையிலேயே டிரைவர்கள், கண்டக்டர்கள் வந்தனர். அவர்கள் பஸ்களை வெளியே எடுக்கும்போது பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

    அங்கு பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பிறகு பஸ்கள் பணிமனையில் இருந்து பஸ் நிலையங்களுக்கு சென்றன. காலை 8 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சுமார் 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

    தமிழகத்தில் காலை 10 மணி நிலவரப்படி இயக்க வேண்டிய 16,144 பஸ்களில் 15,322 பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு விரைவு பஸ்கள் (எஸ்.இ.டி.சி) 100 சதவீதம் இயக்கப்பட்டது. சென்னையில் 95 சதவீத பஸ்கள் இயங்கின.

    போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் வெளியே வந்தன. நகர பஸ்கள், வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள் பெரும்பாலானவை இயக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், தஞ்சாவூர், கும்பகோணம், புதுச்சேரி, திருப்பூர், ஓசூர், தர்மபுரி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பஸ் போக்குவரத்து சீராக நடைபெற்றது.

    சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3233 பஸ்கள் இயக்கப்படும். இன்று காலை 7 மணி நிலவரப்படி 3092 பஸ்கள் இயக்கப்பட்டதாக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

    சென்னையில் உள்ள 32 டெப்போக்களில் இருந்தும் வழக்கமான அளவு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் எப்பொழுதும் போல் பயணம் செய்தனர். மகளிர் இலவச பயணத்தை தொடர்ந்தனர்.

    ஒரு சில டெப்போக்களில் போராட்டக்காரர்கள் கூட்டமாக நின்று கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பூந்தமல்லியில் 80 சதவீத பஸ்கள் இன்று இயக்கப்பட்டன. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்பட்டன.

    பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு அழைக்கப்பட்டனர். ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களை மீண்டும் பணிக்கு வரவழைத்தனர்.

    இதுதவிர ஐ.ஆர்.டி.யில் பயிற்சி பெறுகின்ற டிரைவர்களும் நேற்றிரவு அழைக்கப்பட்டு பணி வழங்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்களின் போராட்டத்தை சமாளிக்க அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் தற்காலிகமான டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதனால் பொங்கல் சிறப்பு பஸ்கள் உள்ளிட்ட வழக்கமான பஸ் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வழக்கமான அளவு பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பிசுபிசுத்தது.

    • தமிழகம் முழுவதும் தற்போது 15,528 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • மாநகர பஸ்கள் 95 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகம் முழுவதும் தற்போது 15,528 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 95.33 சதவீத பஸ்கள் இயங்கி வருகின்றன.

    * SETC பஸ்கள் 100 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர பஸ்கள் 95 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன.

    * அனைத்து வகையான பஸ்களும் சீராக இயங்குகின்றன. பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அச்சமின்றி பயணிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேன்கனிக்கோட்டையில் இருந்து 44 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை.

    தருமபுரி:

    காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

    தருமபுரி அரசு போக்குவரத்து மண்டலத்துக்குட்பட்ட தருமபுரி, பொம்மிடி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட 14 பணிமனைகள் உள்ளன.

    இதில் மண்டலத்திற்கு உட்பட்ட தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் என 853 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் நிலையில் தருமபுரி பஸ் நிலையத்தில் இன்று காலை முதல் அனைத்து பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

    இதேபோன்று பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது மேலும் புறநகர் பஸ்கள் 24, டவுன் பஸ்கள்-23, மாற்று பஸ்கள்-4 என மொத்த 51 பஸ்கள் இன்று வழக்கம் போல் இயங்கி வருகின்றன.


    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் என 900-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முதல் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் அரசு டவுன் பஸ்கள் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.

    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் 100, புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரையில் 45 பஸ்களும், ஓசூரில் இருந்து 74 சாதாரண பஸ்கள் , 76 சொகுசு பஸ்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்பட வெளி மாநிலங்களும், புறநகருக்கும் இயக்கப்பட்டன.

    இதேபோல் தேன்கனிக்கோட்டையில் இருந்து 44 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காவேரிப்பட்டனத்தில் வழக்கம் போல அனைத்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து பஸ்களும் வழக்கம் போல குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கின.

    இதனால் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை.

    ×