search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயிலின் தாக்கத்தால்"

    • கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். நடந்து செல்பவர்கள் குடைகளை பிடித்த வாரும், ஆங்காங்கே கடைகளில் சிறிது நேரம் இழப்பாறியும் சென்றனர்.

    இது குறித்து அந்தியூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், சித்திரை, வைகாசி மாதங்களில் கூட கடந்து வந்து விட்டோம்.

    அந்த வெயிலை காட்டிலும் தற்போது 2 நாட்கள் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

    மாலை 5 மணி அளவில் தான் வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • சேலம் மாவட்டத்தில், விவசாயிகளால் பரவலாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
    • கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், கிணறுகள் ஆகியவற்றில் நீர் அதிகமாக இருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில், விவசாயிகளால் பரவலாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, மேச்சேரி, கருமந்துறை மலை கிராமங்கள், வாழப்பாடி, தலைவாசல், மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி உள்பட பல இடங்களில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.

    கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், கிணறுகள் ஆகியவற்றில் நீர் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி, கோடை காலத்துக்கு முன்னர் பயிரிடப்பட்ட தக்காளி செடிகள், கடந்த சில மாதங்களாக அதிகளவில் விளைச்சல் கொடுத்து வந்தன.

    இதனால் சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கிலோ ரூ.20-க்கும் குறைவாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகளின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால், விளைச்சல் குறைய தொடங்கி, சந்தைக்கு தக்காளி வரத்து சரிய தொடங்கியது. இதனால் தக்காளி விலை உயர தொடங்கியுள்ளது.

    தற்போது உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.34 முதல் ரூ.38 வரையிலும், தினசரி மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாநகரில் உள்ள உழவர் சந்தைகளில் நாளொன்றுக்கு சுமார் 30 டன் தக்காளியை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தக்காளி தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட விவசாயிகளிடம் இருந்தும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம் உழவர் சந்தைக்கு தக்காளி கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம், தேசிய மின்னணு சந்தை மூலம், சேலம் மாவட்டத்துக்கு கடந்த 2 மாதங்களில் 900 டன் தக்காளி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது சேலம் மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. புதியதாக பயிரிடப் பட்டுள்ள தக்காளி செடிகளில் மகசூல் கிடைத்திட ஒரிரு வாரங்கள் ஆகும்.

    எனவே தக்காளி தேவையை பூர்த்தி செய்திட, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம் தேசிய மின்னணு சந்தையை பயன்படுத்தி தக்காளி கொள்முதல் செய்திட திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×