search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்ணெய்காப்பு"

    • ஆறடி உயரத்தில் கருங்கற்சிலையாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார்
    • அன்றைய தினம் லாபம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை

    கோபி அருகே கூகலூர் ஆஞ்சநேயரை மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவரை வழிபட்டு நற்பலனை பெறுகிறார்கள்.

    ஆறடி உயரத்தில் கருங்கற்சிலையாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார் அனுமன்.

    உடல்நலம் சரியில்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இங்கே வந்து, வடைமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் நலம் பெறுவர் என்பதும் தன்னம்பிக்கையாக இருக்கிறது.

    சுற்று வட்டாரத்தில் இருக்கும் வியாபாரிகள் பலர், தினமும் கடை திறப்புக்கு முன் கடைச்சாவியை இவரது திருவடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

    அப்படி செய்தால் அன்றைய தினம் லாபம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    • திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று.
    • இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    திருச்செந்தூர் கடல் பகுதியில் இருந்து தென் இலங்கை மிக அருகாமையில் அமைந்துள்ளது.

    திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று.

    இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டால் சேதுசமுத்திர திட்டம் எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவேறும் என்ற கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் எடுத்து கூறப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்துக்கு அருகாமையில் அமைந்திருப்பது வட இலங்கை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் விளக்கம் ஆகும்.

    காரிய சித்தி ஆஞ்சநேயர்

    உன்னதமான இந்தப் படத்தை பூஜா மண்டபத்தில் வைத்திருந்தாலே சகல தோஷங்களும் விலகி, சத்ருபயம் நீங்கி சகல சம்பத்தும், ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது சாஸ்திர விதி.

    • நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம், வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.
    • நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம், வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.

    முத்தங்கி, வெண்ணை காப்பு, சந்தன காப்பு அலங்காரமும், புஷ்ப அங்கி அலங்காரமும் செய்யப்படுகிறது.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவித்து அவரை தரிசனம் செய்தால், லட்சுமி அருள் கிடைக்கும்.

    வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு ஏற்படும்.

    சங்கடங்கள் நீங்கும்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் அணிவித்து அவரை தரிசனம் செய்தால், மனதில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

    மனக்குழப்பம் தீரும். அறிவாற்றல் பெருகி மகிழ்ச்சி ஏற்படும்.

    திருமணம் கைகூடும்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அணிவித்து அவரை தரிசனம் செய்தால், நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    அதேபோல், நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

    நோய்களைத் தீர்க்கும் வெண்ணைகாப்பு

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், நோய்கள் நீங்கும்.

    சந்தனக்காப்பு அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், லட்சுமியின் அருள் கிட்டும்.

    புஷ்ப அங்கி அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், மனதில் நினைத்தவை விரைவில் நிறைவேறும்.

    3 மாதங்களுக்கு மட்டுமே வெண்ணை காப்பு

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு குளிர் காலத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    எல்லா நாட்களிலும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    வடைமாலை

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் வடைமாலை சாற்றப்படுகிறது.

    பொது அபிசேகமும் நடத்தப்படுகிறது.

    அமாவாசை நாட்களில் சிறப்பு அபிசேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    • உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர்.
    • ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும்.

    அனுமன் மந்திரம் வருமாறு:

    ஓம் ஜம் ஹரீம், ஹனுமதே ராமதூதாய

    லங்கா வித்வம்ஸனாய: அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய,

    ஸாகினீடாகினீவித்வப்ஸனாய, கிலகிய பூபூ காரினே

    விபீக்ஷணாய, ஹனுமத் தேவாய, ஓம் ஐம்

    ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹீரீம் ஹ்ரும் பட் ஸ்வாஹா

    அனுமன் மந்திரத்தின் பொருள் வருமாறு:

    செயற்கரிய செயல்புரியும் என் சுவாமியே(ஆஞ்சநேயரே), உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர்.

    ஸ்ரீ ராமதூதரும் கருணைக் கடலும் ஆகிய ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும்.

    • அவ்வாறு செய்வதால் சனி, ராகு இடையூறுகளில் இருந்து மனிதர்கள் விடுபடலாம்.
    • ஆஞ்சநேயருக்கு நோய் நீக்கும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.

    நவக்கிரகங்களின் அங்கமாக விளங்கும் ராகுவும், சனியும் ஒரு முறை ஆஞ்சநேயரிடம் தோல்வி அடைந்து உள்ளனர்.

    அதனால், அவர்கள் ஆஞ்சநேயருக்கு கீழ் படிந்தவர்களாக உள்ளனர்.

    புவியில் சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ராகுவுக்கான உளுந்தும், சனிக்கான எள் எண்ணையும் சேர்த்து செய்த வடைமாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு நடத்தலாம்.

    அவ்வாறு செய்வதால் சனி, ராகு இடையூறுகளில் இருந்து மனிதர்கள் விடுபடலாம்.

    அதன் காரணமாக ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.

    நோய் தீர்க்கும் துளசி தீர்த்தம்

    ஆஞ்சநேயருக்கு நோய் நீக்கும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.

    பக்தர்களுக்கு துளசி தீர்த்தமும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    ×