search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவேகானந்தர் மண்டபம்"

    • பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இறங்கி உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் உயிர்காப்பு கவசம் அணிய அறிவுறுத்தல்.

    கன்னியாகுமரி:

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதி கடலில் நடைபெற்ற படகு விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    இந்த படகு விபத்தின் எதிரொலியாக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இறங்கி உள்ளது. இங்கு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு ஒன்றில் சுமார் 150 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. சுற்றுலா படகில் செல்லும் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் (உயிர் காப்பு மிதவை) கொடுக்கப்பட்டு அதை அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், விவேகானந்த நினைவு மண்டபத்துக்கு சென்ற பிறகு தான் அதை அகற்ற வேண்டும் எனவும். படகில் பயணிக்கும் போது சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க எழுந்து நிற்க வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஒரு படகில் 150 பேர் மட்டுமே பயணிக்கும் பொருட்டு அதிக சுற்றுலாப் பயணிகள் ஏறாதவாறு கண்காணிப்பு பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

    • விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தாமதம்
    • அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, நீர்மட்டம் உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த பிறகு கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்று காலை கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டியபடகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 3 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
    • காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுபோக்குவரத்து தொடங்கியது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த பிறகு கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்று 2-வது நாளாக கடல் சீற்றம் நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப் படவில்லை.

    இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 3 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுபோக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட் டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.

    • சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது
    • சீரமைக்கும் பணி சென்னையை சேர்ந்த 15 பேர் கொண்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதனை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பொதிகை படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து பொதிகை படகு கன்னியா குமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடல் வழியாக சின்னமுட்டம் துறை முகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த பணியில் சென்னையை சேர்ந்த 15 பேர் கொண்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர். பராமரிக்கும் பணி 3 மாத காலம் நடந்தது. பணி முடிவடைந்ததை தொடர்ந்து பொதிகை படகு நேற்று புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு சின்னமுட்டத்தில் இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தபொதிகை படகு விரைவில் வெள்ளோட்டம் விடப்படுகிறது.

    அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தகவல்
    • கடந்த 6 மாதங்களாக திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து செல்வது வழக்கம்.

    கடந்த 6 மாதங்களாக திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 24 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதம் 73 ஆயிரத்து 700 பேரும், மார்ச் மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரும், ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேரும், மே மாதம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஜூன் மாதம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேரும், ஜூலை மாதம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேரும், ஆகஸ்ட் மாதம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேரும், செப்டம்பர் மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், அக்டோபர் மாதம் 2 லட்சத்து 11 ஆயிரம் பேரும், நவம்பர் மாதம் 2 லட்சத்து 9 ஆயிரம் பேரும், கடந்த டிசம்பர் மாதம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேரும் படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர். மொத்தத்தில் கடந்த ஆண்டில் 17 லட்சம் பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்தனர்.

    இதில் கடந்த ஆண்டில் டிசம்பர் மாதம் மட்டும் அதிக அளவு அதாவது 2 லட்சத்து 53 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கன்னியாகுமரியில் களைகட்டும் சீசன்
    • திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணியானது நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரிக்கு தினமும் ஏராள மான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதி களை பார்வையிடும் அவர்கள் கடல் நடுவே அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர்.

    விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவ ள்ளுவர் சிலையை பார்ப்ப தற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், தாமிரபரணி, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகில் பயணம் செய்ய சாதாரண கட்டணம் ரூ.50 வீதமும், சிறப்பு கட்டணம் ரூ.200 வீதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியை பொறுத்தவரை 2 சீசன் காலங்கள்உள்ளன. கோடை விடுமுறை மற்றும் நவம்பர் டிசம்பர் மாதங்களான சபரிமலை சீசன் எனப்படும் இரண்டு சீசன்காலங்கள் ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட கன்னியாகுமரி தற்போது இந்த சபரிமலை சீசனில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்பபக்தர்களால் களைகட்டியுள்ளது.

    கடந்த ஒருமாதத்தில் மட்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகள் மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பார்த்து ரசித்து உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட் டம் அதிகமாக காணப் படும் என்றும் அவர்கள் தெரி வித்தனர். திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணியானது நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனும திக்கப்படுவதில்லை.

    • சனி, ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி குவிந்தனர்
    • நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரி சீசன் காலமாக கருதப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    இந்த3மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல் மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

    இந்த நிலையில் சனி, ஞாயிறு தொடர்விடு முறையையொட்டி கடந்த2நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களைகட்டியது.

    இந்த2நாட்கள் தொடர்விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக இருந்தனர்.அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்களில்பல்லா யிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்குவிந்தனர்.இன்றும் கன்னியாகுமரியில்முக்கடலும்சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துஇருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்றுஅதிகாலையில் வானம் மேகமூட்டமாக இருந்ததால் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலாபயணிகள் பார்க்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலாபயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ளவிவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடஇன்றுகாலை 6மணியில் இருந்தேசுற்றுலாபயணிகள் படகுத்துறையில்நீண்ட கியூவில் காத்திருந் தனர்.அவர்கள்காலை 8மணியில்இருந்து படகில்ஆர்வத்துடன் பயணம்செய்துவிவே கானந்தர்மண்டபத்தைபார்வையிட்டுவந்த னர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா,சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறைஇல்லாத நாட்களிலும் சுற்றுலா தளங்கள் களை கட்டியது.

    இந்தசுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும்போ டப்பட்டுஇருந்தது. கடற்கரைப்பகுதியில்சுற்றுலாபோலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர்நினைவு மண்டபத்தை சனி ஞாயிறு தொடர் விடுமுறையான கடந்த2நாட்களில் மட்டும் 17ஆயிரத்து400சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை 9ஆயிரத்து200 பேரும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 8ஆயிரத்து200 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.

    • படகு குழாமில் இருந்து தினமும் 3 படகுகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன
    • 2 அதி நவீன சொகுசு படகுகள் வாங்கப்பட்டு இதுவரை அந்த படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலின் நடுவில் விவோனந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக படகு குழாமில் இருந்து தினமும் 3 படகுகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன.

    விவேகானந்தர் மண்டப படகு தளத்தில் தற்போது ஒரு படகு மட்டுமே நிறுத்த முடியும். இங்கு கூடுதல் படகுகளை நிறுத்துவதற்காக ரூ.20 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இன்று பகல் சென்னை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மணிவாசன் தலைமையில் அதிகாரிகள் குழு, விவேகானந்தர் மண்டப படகு தளத்தில் ஆய்வு மேற்கொண்டது.

    தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அருணாசலம், செயற்பொறியாளர்கள் வெள்ளைச்சாமி, சுஜாதா மற்றும் பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். விவேகானந்தர் மண்டபத்திற்கு 3 படகுகள் இயக்க ப்பட்டு வரும் நிலையில் மேலும் 2 அதி நவீன சொகுசு படகுகள் வாங்கப்பட்டு இதுவரை அந்த படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி வருகை
    • போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும்.

    தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களைகட்டியது. இன்றும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்டகியூவில் காத்திருந்தனர்.அவர்கள் காலை 8 மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தளங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலா தளங்கள் களைகட்டியது.

    இந்த சுற்றுலா தளங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை 6 ஆயிரத்து 600 பேரும், ஞாயிற்றுக்கிழமை 8 ஆயிரத்து 900 பேரும், தீபாவளி பண்டிகையான நேற்று 9 ஆயிரத்து 400 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    • பரிவேட்டை திருவிழாவையொட்டி நடவடிக்கை
    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துஉள்ளது.

    இவற்றை தினமும் கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டுகளித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி இந்த படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

    தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருவிழாவான வருகிற 5-ந்தேதிகாலை 11.30 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்காக ஊர்வல மாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த பரிவேட்டை திருவிழா வில் சுற்றுலாப்ப யணிகள், விவேகானந்த கேந்திரா மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஊழியர்களும்பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்று பகல் 12 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை கன்னியா குமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழா நடைபெறும். வருகிற 5-ந்தேதி அன்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நிறுத்துவதால் அன்றைய தினம் பகல் 12 மணி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் மூடப்படும் என்று விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

    • சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இயக்கப்பட்டது
    • கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு தினமும் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஓணம் பண்டிகை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் 2 மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்து நின்று படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக நேற்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது.

    இருப்பினும் வழக்கம்போல் மாலை 4 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்துநிறுத்தப்பட்டது. ஆனால் அதே சமயம் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்த சுற்றுலாபயணிகளை இரவு 7 மணி வரை படகுமூலம் கரைக்கு திரும்பி அழைத்து வந்தனர். இரவில் மின்விளக்குவெளிச்சத்தில் இந்த படகுகள் இயக்கபட்டன. இரவிலும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கரைக்கு சுற்றுலா பயணிகள் திரும்பி வருவதற்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் படகில் அச்சத்துடன் பயணம் செய்து கரை திரும்பினர்.

    பவுர்ணமியையொட்டி நேற்று இரவு குமரி கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இன்று காலை 10 மணிக்கு தான் கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதன் காரணமாக விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 10 மணிக்கு பிறகு தொடங்கியது. இதனால் படகு போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக போக்குவரத்து தொடங்கியது.

    • சின்னமுட்டம்துறைமுகத்தில் இருந்து கடல்வழியாகபடகு துறைக்கு கொண்டு வரப்பட்டது
    • திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன் படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவைபூசி பராமரிப்பதற்காக இரும்பு பைப் கம்பிகளால் சாரம் கட்டும் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் தற்போது படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் விவேகானந்தா படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து விவே கானந்தா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத் துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த விவேகானந்தா படகு கரையேற்றப்பட்டு ரூ. 25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த சீரமைப்பு பணியில் சென்னையை ேசர்ந்த என்ஜினீயர் குமார் தலைமையில் 15 பேர் கொண்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர். இந்த படகு பராமரிக்கும் பணி 2 மாத காலம் நடந்தது. இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்ததை ெதாடர்ந்து விவேகானந்தா படகு நேற்று புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு சின்னமுட்டத்தில் இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவேகானந்தா படகு விரைவில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்ட பம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணி களை ஏற்றி செல்ல பயன் படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×