search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைப்புபணி"

    • சின்னமுட்டம்துறைமுகத்தில் இருந்து கடல்வழியாகபடகு துறைக்கு கொண்டு வரப்பட்டது
    • திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன் படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவைபூசி பராமரிப்பதற்காக இரும்பு பைப் கம்பிகளால் சாரம் கட்டும் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் தற்போது படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் விவேகானந்தா படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து விவே கானந்தா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத் துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த விவேகானந்தா படகு கரையேற்றப்பட்டு ரூ. 25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த சீரமைப்பு பணியில் சென்னையை ேசர்ந்த என்ஜினீயர் குமார் தலைமையில் 15 பேர் கொண்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர். இந்த படகு பராமரிக்கும் பணி 2 மாத காலம் நடந்தது. இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்ததை ெதாடர்ந்து விவேகானந்தா படகு நேற்று புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு சின்னமுட்டத்தில் இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவேகானந்தா படகு விரைவில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்ட பம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணி களை ஏற்றி செல்ல பயன் படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×