search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவு"

    • இப்பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகின்றது.
    • மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் பகுதியில் வேணுகோபாலபுரம் வடக்கு, தெற்கு, சுதர்சனம் தெரு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள், பள்ளிக்கூடங்கள் இருந்து வருவதால் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ள நிலையில் தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் அடையாளம் தெரியாத புதுப்புது நபர்கள் மின்விளக்கு எரியாமல் இருளில் உள்ளதால் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் போன்றவற்றை அடைத்து விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைகள் மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் அடிப்படை தேவையான தெரு மின்விளக்குகள் இல்லாத நிலையில், இந்த பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்று விடுவோமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் வெளியில் வர முடியாத சூழ்நிலை காரணமாக யாருக்கேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், அசம்பாவிதம் நடைபெற்றாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாநகராட்சி அதிகாரிகளும் பலமுறை புகார் அளித்தும் அடிப்படை தேவையான தெரு மின்விளக்குகள் சரியான முறையில் பொருத்தப்ப டாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்து வருகின்றன என பொதுமக்கள் குமறி வருகின்றனர்.

    ஆனால் மாநகராட்சி ஊழியர்களோ எதை பற்றியும் அச்சப்படாமல் பொதுமக்கள் புகார் அளித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற அலட்சியமான பதில்களை எப்போதும் தெரிவித்து வருவதால் இது சம்பந்தமாக யார் நடவடிக்கை எடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு மின்விளக்குகள் உடனடியாக பொருத்தி குற்ற சம்பவங்கள் நடைபெ றாமலும், விபத்துக்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவங்களால் அந்த பகுதி

    • 8 தொட்டாக்கள், ஜீவி, c/o காதல், வனம், ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் வெற்றி.
    • இவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தொட்டாக்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வெற்றி. இப்படத்தை தொடர்ந்து ஜீவி படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச பட விழாக்களிலும் விருதுகள் கிடைத்தன. அதன்பின்னர் c/o காதல், வனம், ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.


    இரவு
    இரவு

    இந்நிலையில் வெற்றி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரவு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கவுள்ளார். மேலும் இதில் சந்தான பாரதி, மன்சூர் அலிகான், பொன்னம்பலம், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 

    • மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது
    • மயிலாடி பங்குத்தந்தை சைமன் மறையுறையாற்றுகிறாா்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும். ஆலய திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் பழையகோவிலில் திருப்பலி, புனிதசூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெற்று வருகிறது.

    8-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடந்தது. ஆலஞ்சி வட்டார முதல்வர் அருட்ப பணியாளர் தேவதாஸ் தலைமையில் திட்டுவிளை பங்குதந்தை அருட்பணியாளர் சஜுமறையுரை ஆற்றினார். இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடந்தது.

    9-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அஞ்சு கூட்டுவிளை பங்கு இறைமக்கள் திருவிழாவை சிறப்பிக்கின்றனா்.காலை நடைபெற்ற நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலிக்கு கீழமணக்குடி பங்குத்தந்தை ஆன்றனி பிரபு தலைமை தாங்கி, திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றினார்.

    மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனைக்கு திருநயினாா் குறிச்சி பங்குத்தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமை தாங்குகிறார். மயிலாடி பங்குத்தந்தை சைமன் மறையுறையாற்றுகிறாா். 9 மணிக்கு சூசையப்பர் தங்க தேர்ப்பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவை முன்னிட்டு நாளை (18-ந்தேதி) அதிகாலை தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலி அருட்பணியாளர் சுவக்கின் தலைமையில் நடைபெறும். அருட்பணியாளர் மில்லா் மறையுறையாற்றுகிறாா். காலை 8 மணிக்கு நடைபெறும் ஆங்கிலத் திருப்பலியை அருட்ப பணியாளர் ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறாா்.

    தொடா்ந்து புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஜீன்ஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத் தோ் பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், பகல் 12 மணிக்கு சிறப்பு திருப்பலியும் மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை திருத்தல பங்குமக்கள், பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், இணை பங்குத்தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப்பேரவை துணை தலைவா் ஜோசப், செய லாளர் சுமன், பொருளா ளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள் செய்து வருகிறார்கள்
    • இரவு 9 மணிக்கு சூசையப்பர் தங்கத் தேர்ப்பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பங்கு தந்தை அருட்பபணியாளர் ஆன்றனி அல்கார்ந்தர் கொடியேற்றி வைத்தார். இதில் பங்கு பேரவை துணைத் தலைவர் ஜோசப், செயலாளர்சுமன், பொருளாளர் தீபக் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலா் ரசல் ராஜ் தலைமை வகித்து மறையுரையாற்றினார்.

    திருவிழா நாட்களில் தினமும் பழையகோவிலில் திருப்பலி, புனிதசூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது. 7-ந் திருவிழாவான நேற்று இரவு திருச்சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். 8-ந் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30மணிக்கு ஜெபமாலையும் அதைத் தொடர்ந்து திருப்பலியும் நடக்கிறது. ஆலஞ்சி வட்டார முதல்வர் அருட்ப பணியாளர் தேவதாஸ் தலைமையில் திட்டுவிளை பங்கு தந்தை அருட்ப பணியாளர் சஜுமறையுரை ஆற்றுகிறார்.இரவு 9மணிக்கு திருச்சப் பரபவனி நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) அஞ்சு கூட்டுவிளை பங்கு இறைமக்கள் திருவிழாவை சிறப்பிக்கின்றனா்.காலை 10-30 மணிக்கு நடைபெறும் நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலிக்கு கீழமணக்குடி பங்குத்தந்தை ஆன்றனி பிரபு தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறாா். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனைக்கு திருநயினாா் குறிச்சி பங்குத்தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமை வகிக்கிறாா். மயிலாடி பங்குத்தந்தை சைமன் மறையுறையாற்றுகிறாா்.

    இரவு 9 மணிக்கு சூசையப்பர் தங்கத் தேர்ப்பவனிநடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலி சுவக்கின் தலைமையில் நடைபெறும். மில்லா் மறையுறையாற்றுகிறாா். காலை 8 மணிக்கு நடைபெறும் ஆங்கிலத் திருப்பலியை ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறாா். தொடா்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஜீன்ஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும் பகல் 12 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், இணைப் பங்குத் தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்
    • இதற்காக உயரமான பனை மரங்கள் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும்

    கன்னியாகுமரி:

    கார்த்திகை தீபத் திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண் டாடப்படுகிறது. இதை யொட்டி குமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் உள்பட பல கோவில்களில் கார்த்திகை தீபத் திரு விழாவையொட்டி நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

    இதற்காக உயரமான பனை மரங்கள் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும். அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். இரவு கோவில் அர்ச்சகர் பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம்ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். அதன் பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனைஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகிவிடும்.

    அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளி சென்று தங்களது வீடுகளிலோ தொழில் நிறுவனங்களிலோ அல்லது விளை நிலங்களிலோ போடுவது வழக்கம். இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    • முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் முக்கிய சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.

    சாலையோர கடைகள் அனைத்தும் மக்கள் தொகை இருப்புக்கு தகுந்தவாறு அனைத்து சாலைகளிலும் சம அளவில் பிரித்து கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் தங்களது சரக்கு பொருட்களை காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாநகரில் இறக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற நேரங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டது.

    தீபாவளியையொட்டி திருப்பூர் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பிரதான ரோடுகள் என பல இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். இதையொட்டி ஆயுதப்படை, பயிற்சி போலீசார், பட்டாலியன் போலீசார் என மாவட்டம் முழுவதும் 1100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி விற்பனையையொட்டி நேற்றிரவு முதல் இன்று காலை வரை போலீசார் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளர்கள் பலர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஒரு வாரம் கழித்துதான் அவர்கள் திருப்பூர் திரும்புவார்கள். எனவே போலீசார் ஒரு வாரம் வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்து சென்றால் அந்த பகுதியில் ரோந்து பணியை தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.

    • நவராத்திரி 5-ம் திருவிழாவையொட்டி நடந்தது
    • இலங்கை பக்தர் கூடை கூடையாக மலர் தூவி வழிபாடு

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்தக் கோவிலில் நவ ராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 26-ந்தேதிதொடங்கியது. 4-ம்திருவிழாவான நேற்று இரவு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தைமூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் 4-ம் திருவிழா மண்டகப்படி கட்டளைதாரர்கள் பலவூர் அண்ணாதுரை முத்துக்குமாரி கொட்டா ரம் இசக்கிமுத்து கன்னியா குமரியைச் சேர்ந்த வருவாய்த்துறை வருவாய் ஆய்வாளர் மகாராஜன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி, செயலாளர்அரிகிருஷ்ண பெருமாள், பொருளாளர் வைகுண்ட பெருமாள், துணைச் செயலாளர் ஓம் நமச்சிவாயா, கொட்டாரம்பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்தகுமாரி, சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    5-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11 30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தியும் அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்கா ரத்துடன் தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் இரவு8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் கூடை கூடையாக தாமரை மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.
    • பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.இந்தநிலையில் குழுவில் இருந்த ஒரு பெண் இறந்துவிட்டார். மேலும் இருவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் மாதத்தவணை கட்ட காலதாமதம் ஆனதால் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

    கடன் தவணை செலுத்த வந்த பெண்களிடம், கடன் தவணை செலுத்தாத இருவரின் பணத்தையும் செலுத்த கூறி மிரட்டியுள்ளனர்.இதையடுத்து வேறு இடத்தில் குடியிருக்கும் அந்த பெண்களிடம் போன் மூலம் பேசியதில் கடன் தவணை செலுத்துவதாக அவர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் தொகைக்காக தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பெண்களை சிறை பிடித்து வைத்திருப்பது குறித்த தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் வந்தனர்.இது குறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் இரவு நேரத்தில் இப்படி கூட்டமாக வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்
    • இரவு 9 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை யாளர் பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். காலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    இதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

    • சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இயக்கப்பட்டது
    • கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு தினமும் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஓணம் பண்டிகை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் 2 மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்து நின்று படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக நேற்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது.

    இருப்பினும் வழக்கம்போல் மாலை 4 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்துநிறுத்தப்பட்டது. ஆனால் அதே சமயம் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்த சுற்றுலாபயணிகளை இரவு 7 மணி வரை படகுமூலம் கரைக்கு திரும்பி அழைத்து வந்தனர். இரவில் மின்விளக்குவெளிச்சத்தில் இந்த படகுகள் இயக்கபட்டன. இரவிலும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கரைக்கு சுற்றுலா பயணிகள் திரும்பி வருவதற்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் படகில் அச்சத்துடன் பயணம் செய்து கரை திரும்பினர்.

    பவுர்ணமியையொட்டி நேற்று இரவு குமரி கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இன்று காலை 10 மணிக்கு தான் கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதன் காரணமாக விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 10 மணிக்கு பிறகு தொடங்கியது. இதனால் படகு போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக போக்குவரத்து தொடங்கியது.

    • சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • அதிகாரிகள் வருவதை அறிந்த கும்பல் டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டுவிட்டு தப்பியது.

    தாராபுரம் :

    தாராபுரம் பைபாஸ் ரோட்டில் வீரராகவபெருமாள் கோவில் அருகே அமராவதி ஆற்றையொட்டி உள்ள தனியார், அரசு புறம்போக்கு இடத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஆர்.டி.ஓ., குமரேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த, அவர்கள் மண்ணை கொட்டி விட்டு மண் எடுக்கப்பட்ட டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டு விட்டு கும்பல் தப்பியது.சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 டிப்பர் லாரி, 2 பொக்லைனை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி வழியாக காவிரியில் தண்ணீர் கலந்து வருகிறது. இந்த ஆற்றில், காங்கயம், கம்புலியாம்பட்டி, கோவில்பாளையம், மயில்ரங்கம், மணலூர், சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டு இல்லாமல் இருந்தது. கடந்த சில வாரங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. இதனால் , ஆற்றில் மணல் குவியலாக ஆங்காங்கு பரவியிருந்தது.தற்போது, குறைந்த அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. இதை மணல் திருடர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு கைவரிசை காட்ட துவங்கியுள்ளனர். வேலப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, மயில்ரங்கத்தில், ஈஸ்வரன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் மணல் திருட்டு நடந்துள்ளது. எனவே உடனடியாக, மாவட்ட நிர்வாகம், போலீசார் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • பாறைகள் வெளியே தெரிந்தன
    • திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நேற்றிரவு திடீர் என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது.

    இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள்கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

    கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்வானதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை.

    இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிடவந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 9மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 9 மணிக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். அதே சமயம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

    ×