search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் வேணுகோபாலபுரத்தில் தெரு மின் விளக்கு எரியாததால் இருளில் மூழ்கியது: அச்சத்தில் பொதுமக்கள்
    X

    இருளில் முழ்கிய வேணுகோபாலபுரத்தை படத்தில் காணலாம்.

    கடலூர் வேணுகோபாலபுரத்தில் தெரு மின் விளக்கு எரியாததால் இருளில் மூழ்கியது: அச்சத்தில் பொதுமக்கள்

    • இப்பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகின்றது.
    • மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் பகுதியில் வேணுகோபாலபுரம் வடக்கு, தெற்கு, சுதர்சனம் தெரு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள், பள்ளிக்கூடங்கள் இருந்து வருவதால் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ள நிலையில் தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் அடையாளம் தெரியாத புதுப்புது நபர்கள் மின்விளக்கு எரியாமல் இருளில் உள்ளதால் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் போன்றவற்றை அடைத்து விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைகள் மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் அடிப்படை தேவையான தெரு மின்விளக்குகள் இல்லாத நிலையில், இந்த பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்று விடுவோமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் வெளியில் வர முடியாத சூழ்நிலை காரணமாக யாருக்கேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், அசம்பாவிதம் நடைபெற்றாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாநகராட்சி அதிகாரிகளும் பலமுறை புகார் அளித்தும் அடிப்படை தேவையான தெரு மின்விளக்குகள் சரியான முறையில் பொருத்தப்ப டாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்து வருகின்றன என பொதுமக்கள் குமறி வருகின்றனர்.

    ஆனால் மாநகராட்சி ஊழியர்களோ எதை பற்றியும் அச்சப்படாமல் பொதுமக்கள் புகார் அளித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற அலட்சியமான பதில்களை எப்போதும் தெரிவித்து வருவதால் இது சம்பந்தமாக யார் நடவடிக்கை எடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு மின்விளக்குகள் உடனடியாக பொருத்தி குற்ற சம்பவங்கள் நடைபெ றாமலும், விபத்துக்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவங்களால் அந்த பகுதி

    Next Story
    ×