search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் ஆர்ப்பாட்டம்"

    • கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர்.
    • கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ150 வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்

    பொள்ளாச்சி:

    தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுபடுத்தக்கோரி வருகிற ஜூலை 13-ந் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர்.கடந்த பல மாதங்களாக தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல்லை அர சு கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதார விலைக்கு தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும், கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ150 வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

    ரேஷன் கடையில் மானியத்துடன் வழங்கும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்னை விவசாயிகளின் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 13-ந் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள தாகவும் தெரிவித்தனர்.பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை சந்தித்த விவசாயிகள் மனு அளித்தனர்.

    • ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு
    • அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

    பொள்ளாச்சி :

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் பொள்ளாச்சியில் வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு பல்லடம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திருமூர்த்தி பாசன விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    மேலும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையில் நீர் பாது காப்பு கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம், தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபால கிருஷ்ணன், திருமூர்த்தி நீர்தேக்க திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம். மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.

    கூட்ட முடிவில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நீர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கூறியதாவது:

    பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்காம லும், ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாயத்திற் கும் போதுமான தண்ணீர் கிடைக்காததால் தரிசு நிலங்க ளாக உள்ளன. இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது ஏற்று கொள்ள முடியாது.

    இந்த திட்டத்தால ்கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. எனவே வருகிற 27-ந் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அன்று மதியம் 1 மணி வரை கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒட் டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவி டும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே போராட்டத்தை கைவிடக் கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பி.ஏ.பி. விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

    • பொள்ளாச்சியில் 27-ந் தேதி நடக்கிறது
    • விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பொள்ளாச்சி,

    ஆழியாரில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி பொள்ளாச்சியில் வருகி 27-ந் தேதி 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பிஏபி திட்டக்குழுத்தலைவர் தெரிவித்துள்ளார்.

    பிஏபி திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்துவரும் நிலையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்த திட்டத்திற்கு கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிஏபி விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நேற்றுமுன்தினம் ஆழியாறு அணை விவசாயிகள் பொள்ளாச்சியில் 1500-க்கும் அதிகமானோர் பங்கேற்று ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்நிலையில், திருமூர்த்தி அணை பாசன சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோச னைக்கூட்டம் நெகமத் தில் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. இந்த ஆலோச னை கூட் டத்தில் திருமூர்த்தி அணை பாசன சங்கங் களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆழியாறு அணை யிலிருந்து ஒட ்டன்சத் திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட அரசுக ்கோரிக்கை வைத்து வருகிற 27-ந் தேதி பொள் ளாச்சியில் ஆர்ப ்பாட்டம் நடத்து வது என முடிவு செய்யப் பட்டது.

    இது குறித்து பிஏபி திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் பரம சிவம் கூறு கையில், வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆர்ப் பாட்டத்தில் பாலாறு படுகையை சேர்ந்த திருமூர்த்தி அணை பாசன நீரை பயன்படுத்தும் 25 ஆயிரம் விவ சாயிகள் பங்கேற்க உள்ளோம் என்றார். 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், காவிரியில் தற்பொழுது வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைமடைப்பகுதிகளான கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் உள்ள பெரும் பகுதியான வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்தக்தின் கறம்பக்குடி ஒன்றியத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். மாநிலச்செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    கோரிக்கைகளை விளக்கி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ராமையன், உடையப்பன்,  ஸ்ரீதர், துரைச்சந்திரன், அய்யாவு, அன்பழகன்,  பாலசுந்தரமூர்த்தி, தங்கப்பா, மணிவேல், இளவரசு, பிரபாகர், சின்னத்துரை உள்ளிட்டோர் பேசினர்.
    ×