என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் 13-ந் தேதி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர்.
- கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ150 வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்
பொள்ளாச்சி:
தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுபடுத்தக்கோரி வருகிற ஜூலை 13-ந் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர்.கடந்த பல மாதங்களாக தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல்லை அர சு கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதார விலைக்கு தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும், கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ150 வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
ரேஷன் கடையில் மானியத்துடன் வழங்கும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தென்னை விவசாயிகளின் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 13-ந் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள தாகவும் தெரிவித்தனர்.பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை சந்தித்த விவசாயிகள் மனு அளித்தனர்.






