search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைமடைப்பகுதி"

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், காவிரியில் தற்பொழுது வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைமடைப்பகுதிகளான கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் உள்ள பெரும் பகுதியான வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்தக்தின் கறம்பக்குடி ஒன்றியத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். மாநிலச்செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    கோரிக்கைகளை விளக்கி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ராமையன், உடையப்பன்,  ஸ்ரீதர், துரைச்சந்திரன், அய்யாவு, அன்பழகன்,  பாலசுந்தரமூர்த்தி, தங்கப்பா, மணிவேல், இளவரசு, பிரபாகர், சின்னத்துரை உள்ளிட்டோர் பேசினர்.
    ×