search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer demonstration"

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், காவிரியில் தற்பொழுது வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைமடைப்பகுதிகளான கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் உள்ள பெரும் பகுதியான வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்தக்தின் கறம்பக்குடி ஒன்றியத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். மாநிலச்செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    கோரிக்கைகளை விளக்கி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ராமையன், உடையப்பன்,  ஸ்ரீதர், துரைச்சந்திரன், அய்யாவு, அன்பழகன்,  பாலசுந்தரமூர்த்தி, தங்கப்பா, மணிவேல், இளவரசு, பிரபாகர், சின்னத்துரை உள்ளிட்டோர் பேசினர்.
    சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, தமிழக விவசாயிகள் சங்கம் சின்னத்துரை, ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கம் விஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அயிலை சிவசூரியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள், சேலம் சென்னை 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு, 8 வழிச் சாலைக்காக பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து, விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுகிறது. ஏற்கனவே சேலம் சென்னைக்கு 3 வழிகள் உள்ள நிலையில் 8 வழிச்சாலை அவசியம் இல்லாதது. அப்படி, 8வழிச்சாலை அமைப்பதாக இருந்தால், இயற்கை வளங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஏற்கனவே உள்ள சாலையின் மீது பாலம் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    தொடர்ந்து கூட்டம் தொடங்கியவுடன், ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமை யிலான விவசாயிகள் கூட்ட அரங்கில் கலெக்டர் முன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது, காவிரியில் தண்ணீர் திறக்காததால், இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பாதித்துள்ளது. எனவே, விவசாயிகளுக்கு நிவாரணமாக, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோ‌ஷ மிட்டனர்.

    ×