search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பப்பதிவு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும்.
    • சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

    முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 98 வார்டுகளில் உள்ள 703 நியாய விலைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.

    குடும்ப அட்டை பயன்பாட்டில் இருக்கும் நியாயவிலைக் கடையில் நடைபெறும் முகாமில் குடும்பத் தலைவி டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இப்பதிவின் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வர வேண்டும்.

    விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் இணைக்க தேவையில்லை. வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை.

    விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். விரல் ரேகை சரியாக பதிவாக வில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப் பட்ட கைப்பேசி வழியாக ஒரு முறை கடவுசொல் (ஓ.டி.பி.) பெறப்படும்.

    எனவே முகாமுக்கு வரும் போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசியை எடுத்து வர வேண்டும்.

    இதுகுறித்து சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044-25619208 எனும் தொலைபேசி எண்.94454 77205 எனும் வாட்ஸ் அப் எண் மற்றும் 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தாங்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது பி.இ., பி.டெக் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது, சிறப்பு மையங்களில் மாணவ- மாணவிகள் திரண்டனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை, தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

    இதன் அடிப்படையில் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி நூலக கட்டிட வளாகத்தில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் வனவாசி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்ற சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு மையங்களில் இன்று முதல் காலை கம்ப்யூட்டர் வழியாக விண்ணப்பப் பதிவு தொடங்கியது. குறிப்பாக, காலை 9.30 மணி அளவில் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் சிறப்பு மையங்களில் மாணவ- மாணவிகளின் வருகை அதிகமாக உள்ளது.

    மாநகர் பகுதியில் வசிக்கும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகள், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், ஆதார்கார்டு, சாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தங்களது பெற்றோருடன் இந்த மையங்களில் திரண்டுள்ளனர்.

    என்ஜினீயரிங் படிப்புகளில் சேர வேண்டி அவர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் என்ஜினீயரிங் படிப்புக்கு தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    அதுபோல், பிளஸ்-2 தேர்வு முடிவு ெவளியானவுடன் எடப்பாடி, கொளத்தூர் மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, ஏற்காடு, வீராணம், வீரபாண்டி, காகாபாளையம், இடங்கணசாலை, சித்தர் கோவில், மகுடஞ்சாவடி, சங்ககிரி, தேவூர், இளம்பிள்ளை உள்ளிட்ட தொலை தூரத்தில் உள்ள மாணவ- மாணவிகள் பஸ்களில் புறப்பட்டு சிறப்பு மையங்களுக்கு தங்களது பெற்றோருடன் படையெடுத்தபடி உள்ளனர். இதனால் சிறப்பு மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்த மையங்கள் மாலை 5 மணி வரை செயல்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் https://tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்பதிவை மேற்கொள்ளலாம்.

    ×