search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஸ்து சாந்தி"

    • சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா.
    • மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாள் விரதம் இருப்பது சிறப்பம்சமாகும்.

    மண்ணச்சநல்லூர்:

    சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று காலை தொடங்கியது.

    மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்தலத்தில் தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும் நீங்கவும், தீவினைகளையும் அணுகாமல் இருக்கவும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாள் விரதம் இருப்பது சிறப்பம்சமாகும்.

    வருடம் தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் விரதம் இருப்பார்.இதற்கு பச்சைப் பட்டினி விரதம் என பக்தர்கள் அழைக்கின்றனர்.இந்த 28 நாட்களும் திருகோவிலில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு நீர்மோர், பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.

    பூச்சொரி தல் விழாவை ஒட்டி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம் அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப் பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுகளுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இன்று முதல் பூச்சொரிதல் விழா தொடங்கியதால் சமயபுரம் மாரியம்மன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழாக்கோலம் பூண்டது.

    • மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • வாஸ்து சாந்தி, புண்ணியாசனம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டிக்கு சொந்தமான சுமார் 500 ஆண்டுகள் பழமையான மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவசமாதி மடத்தின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    3 நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, புண்ணியாசனம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால யாக பூஜையுடன் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி வானத்தில் கருடன்கள் வட்டமிட ராமேசுவரம், அழகர்கோவில் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை கலசங்கள் மீது ஊற்றப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும், அன்ன தானமும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தொழிலதிபர்கள் கே.ஜி.பாண்டியன், ஏ.வி.பார்த்தி பன் மற்றும் பாலமேடு கிராம அனைத்து உறவின்முறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாட்டினை கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொரு ளாளர் ஜோதிதங்கமணி, மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்

    ×