search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வார்டு"

    • நகராட்சி அலுவலர் ஒருவர் வார்டு பகுதி சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கொண்ட குழு அமைத்தது.
    • 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை நகர மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் 24 வார்டுகளில் பகுதி சபா குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார்.

    நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், கணக்கர் ராஜ கணேஷ் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் ஒரு வார்டுக்கு அந்தப் பகுதியில் உள்ள கவுன்சிலர் தலைமையில் நகராட்சி அலுவலர் ஒருவர் வார்டு பகுதி சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கொண்ட குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை அறிந்து நகர மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஜூன் முதல் கண்டறியப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 6 பேர் உள்பட 78 பேர் நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரியபட்டினம் அருகே கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டவர்களை ஏற்றி வந்த 40 வயது ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் இருந்தார்.இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று முதன் முதலாக மீண்டும் திறக்கப்பட்ட 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    இங்கு 2 டாக்டர்கள், நர்சுகள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற அரசு அறிவித்துள்ள தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    இதனை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருந்தால் தொற்று அதிகரித்து விடும். இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உள்ளாட்சி ேதர்தலில் போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மீதமுள்ள 6 பதவிக்கு 29 பேர் போட்டியிட்டுள்ளனர். இதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதம் உள்ள 6 பதவிகளுக்கு நாளை 9ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார்.

    மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    இதற்கான பிரசாரம் நேற்று ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகி–றார்கள்.

    சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று மாலைக்க ள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபடுகிறார்கள்.

    • அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான மருத்துவ உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன
    • பாதிப்புக்கு உள்ளாகிறவரை மருத்துவமனையில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100 நாட்களுக்கு பின் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மருத்துவ கல்லூரி தலைமை அரசு மருத்துவமனையில், 50 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு மீண்டும் அமைக்கப்பட்டது.

    மேலும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான மருத்துவ உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தொற்றுப்பரவலை சமாளிக்கும் வகையிலும், பாதித்தோருக்கு உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மீண்டும் உடுமலை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு 30 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது வரை கண்டறியப்பட்டு வருவது ஆரம்பகட்ட தொற்று நிலை தான். பாதிப்புக்கு உள்ளாகிறவரை மருத்துவமனையில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர், உடுமலை, பல்லடத்தில் கொரோனா தடுப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழக அரசு தடுப்பு மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளை படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் வைக்குமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் மீண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது " திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மேலும் படுக்கைகள் அதிகரிக்கப்படும் என்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் குணமடைந்தார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 896 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    ×