search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CORONO SPECIAL WARDS"

    • அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான மருத்துவ உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன
    • பாதிப்புக்கு உள்ளாகிறவரை மருத்துவமனையில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100 நாட்களுக்கு பின் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மருத்துவ கல்லூரி தலைமை அரசு மருத்துவமனையில், 50 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு மீண்டும் அமைக்கப்பட்டது.

    மேலும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான மருத்துவ உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தொற்றுப்பரவலை சமாளிக்கும் வகையிலும், பாதித்தோருக்கு உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மீண்டும் உடுமலை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு 30 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது வரை கண்டறியப்பட்டு வருவது ஆரம்பகட்ட தொற்று நிலை தான். பாதிப்புக்கு உள்ளாகிறவரை மருத்துவமனையில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர், உடுமலை, பல்லடத்தில் கொரோனா தடுப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழக அரசு தடுப்பு மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளை படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் வைக்குமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் மீண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது " திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மேலும் படுக்கைகள் அதிகரிக்கப்படும் என்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் குணமடைந்தார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 896 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    • மத்திய மண்டலத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன
    • கடந்த 2 தினங்களாக பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இரட்டை இலக்க எண்ணாக மாறியுள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி மத்திய மண்டலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு திருச்சி மாவட்டத்தில் 4 இலக்க எண்ணை தொட்டது. அப்போது பொது மக்களும் ெவளியில் வர அச்சப்பட்டு தொடர்ந்து வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

    பின்னர் மாவட்ட நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு முற்றிலும் தடுத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதனால் மக்கள் மீண்டும் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது பொது மக்கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் இயல்பாக கொரோனா அச்சமின்றி சுற்றிதிரிகிறார்கள்.

    கடந்த மாதம் வரையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஒற்றை இலக்க எண்ணில் இருந்தது. ஆனால் கடந்த 2 தினங்களாக பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இரட்டை இலக்க எண்ணாக மாறியுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    அந்த வகையில் திருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்ைற தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து திருச்சி சுகாதராத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

    திருச்சி மாவட்டத்தைப் பொருத்தமட்டில் தற்போது கொரோனா பரிசோதனை நூண்ணுயிரியல் துறை சார்பாக கொரோனா பரிசோதனை செய்வதை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பரிசோதனையின் போது 0.1 சதவீதம் அளவிற்கு தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கடந்த 2 அல்லது 3 தினங்களாக கொரோனா தொற்று உறுதி ெசய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்டவர்களாக வருகிறது. பொது மக்களின் உடலில் தற்போது கொரோனா தொற்றின் வீரியம் குறைந்த அளவில் இருப்பதால் ஒரு வாரத்திற்கு சரியாகி தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.

    வீரியம் அதிகமாக மாறுவதற்கு முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டும்.

    திருச்சி மத்திய மண்டல பகுதிகளான தஞ்சாவூர், புதுக்கோட்ைட, பெர ம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.

    அனைத்து மாவட்ட ங்களிலும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கை வசதிகள், கொரோனா பரிசோதனை செய்வது உள்ளிட்ட செயல்களில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 1,600 படுக்கைகள், 21 கிலோ ஆக்ஸிஜன் உள்ளிட்டவகைள் தயார் நிலையில் உள்ளது.

    மேலும் தடையில்லா ஆக்சிஜன் வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருக்கிறது. பொது மக்களும் கவனமாக பொது இடங்களுக்கு செல்லும் போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    ×