என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாகன விபத்து"
- சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
ஜார்க்கண்ட் மாநிலம், கலகாபாத், கிரிதிக் பகுதியை சேர்ந்தவர் சுகன்மாஞ்சி. இவரது மகன் தீபக் (வயது 23).
இவர் வெம்பாக்கம் அடுத்த நர்சம்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நர்சம்பேட்டை கிரஷர் ரோடு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த அடையாள தெரியாத வாகனம் தீபக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த தீபக் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி தீபக் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.இது குறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை அருகே வாகனம் மோதி 2 பேர் பலியானார்கள்.
- இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை திருமங்கலம் மேலஉரப்பனூர், இந்திரா காலனி, நேதாஜிநகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது32). இவர் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ராமநாதன் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.
அவர் எஸ்.ஆர்.கண்ணன் தோப்பு கண்மாய் முன்பு சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமநாதன் உயிருக்கு போராடினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.
மதுரை பசுமலையில் நேற்று நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்தவிபத்து குறித்து திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் மனோஜ் கொடுத்த புகாரின்பேரில், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இவர் இருசக்கர வாகனத்தில் பொர சப்பட்டு அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார்,
- அங்கு எதிரே நடந்து வந்தவர் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டை அடுத்த ஈருடையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஈசாக் (வயது 43) கூலி தொழிலாளி. இவர் இருசக்கர வாகனத்தில் பொர சப்பட்டு அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரே நடந்து வந்தவர் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈசாக் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈசாக் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திண்டிவனம் அருகே வாகன விபத்தில் தனியார் வங்கி ஊழியர் பலியானார்.
- குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே சாரம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (வயது35). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை சாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் மூலமாக தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பலமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டீபன் ராஜ் சம்பவ இடத்தில் பலியானார் .
இது குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் அங்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள்.
- வாகன விபத்தில் வக்கீல் உட்பட 2 பேர் காயம் ஏற்பட்டது
- காரில் சென்ற போது ஏற்பட்ட சம்பவம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ளே சிக்கப்பட்டியை சேர்ந்த குமரேசன் மகன் கன்ராக் (எ) கணேசன் (வயது 31) அரசு வக்கீல். இவர் நேற்று புதுக்கோட்டை நீதிமன்றம் சென்று விட்டு மீண்டும் ஆலங்குடி நோக்கி நண்பர்கள் இருவருடன் காரில் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியும், கணேசன் ஓட்டி சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் கணேசன் படுகாயமடைந்தார். இதற்கிடையே அந்த வழியாக கீழக் கரும்பிரான்கோட்டையை சேர்ந்த வடிவேல் மகன் சந்தோஷ் (19) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் அவரும் படுகாயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் நந்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி, (வயது, 70) விவசாயி.
இவர் நந்தியவாடி கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது சேத்துப்பட்டு ஆரணி சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் பழனி, மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரதேபரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் பழனி, வைத்திருந்த டைரியில் இருந்த செல்போன் மூலம் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
- விபத்து தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இப்பகுதியில் சீர்காழியில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரணியம், செல்லும் சாலை மற்றும் சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் வைத்தீஸ்வரன் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர். மேலும் அப்பகுதியில் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கபடும் என இன்ஸ்பெக்டர் மணிமாறன் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்