என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாகனம் மோதி விவசாயி பலி
சேத்துப்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் நந்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி, (வயது, 70) விவசாயி.
இவர் நந்தியவாடி கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது சேத்துப்பட்டு ஆரணி சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் பழனி, மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரதேபரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் பழனி, வைத்திருந்த டைரியில் இருந்த செல்போன் மூலம் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்