என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாகனம் மோதி 2 பேர் சாவு
- மதுரை அருகே வாகனம் மோதி 2 பேர் பலியானார்கள்.
- இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை திருமங்கலம் மேலஉரப்பனூர், இந்திரா காலனி, நேதாஜிநகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது32). இவர் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ராமநாதன் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.
அவர் எஸ்.ஆர்.கண்ணன் தோப்பு கண்மாய் முன்பு சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமநாதன் உயிருக்கு போராடினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.
மதுரை பசுமலையில் நேற்று நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்தவிபத்து குறித்து திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் மனோஜ் கொடுத்த புகாரின்பேரில், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்