search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைக்கும் பணி
    X

    சாலையில் பேரிகார்டு அமைக்கும் பணி.

    விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைக்கும் பணி

    • சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
    • விபத்து தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் சீர்காழியில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரணியம், செல்லும் சாலை மற்றும் சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இதனை தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் வைத்தீஸ்வரன் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர். மேலும் அப்பகுதியில் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கபடும் என இன்ஸ்பெக்டர் மணிமாறன் தெரிவித்தார்.

    Next Story
    ×