search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி வருவாய்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் சார்பில் போராட்டம் நடந்துள்ளன.
    • தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்.

    மத்திய அரசின் ஜி.எஸ்டி. வசூலில் மாநிலங்களுக்கு வழங்கும் வருவாய் பகிர்வில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்தநிலையில், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் சார்பில் போராட்டம் நடந்துள்ளன.

    கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து)- ரூ.22,26,983.39 கோடி., அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி - ரூ.3,41,817.60 கோடி. 

    கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப் பகிர்வுத் தொகை - ரூ.6,42,295.05 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் விடுவிக்கப்பட்ட வரிப் பகிர்வுத் தொகை - சுமார் ரூ.6,91,375.12 லட்சம் கோடி.

    இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு புள்ளி விவரங்களுடன் பதில் அளித்து உள்ளது.

    அதில் மாநிலங்கள் கொடுத்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திருப்பி அனுப்பிய தொகை வருமாறு:-

    தமிழ்நாடு - 26 பைசா

    கர்நாடகா - 16 பைசா

    தெலுங்கானா - 40 பைசா

    கேரளா - 62 பைசா

    மத்தியபிரதேசம் - ரூ.1.70

    உத்தரப்பிரதேசம் -ரூ. 2.2

    ராஜஸ்தான் - ரூ.1.14

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3-வது தவணை வரி பகிர்வாக இந்த மாதம் மாநிலங்களுக்கு ரூ.59 ஆயிரத்து 140 கோடி வழங்க வேண்டும்.
    • தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.4 ஆயிரத்து 825 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு தனது வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கு மாதந்தோறும் பகிர்ந்து அளித்து வருகிறது.

    அந்தவகையில், 3-வது தவணை வரி பகிர்வாக இந்த மாதம் மாநிலங்களுக்கு ரூ.59 ஆயிரத்து 140 கோடி வழங்க வேண்டும்.

    ஆனால், இந்த வழக்கமான தவணையுடன், முன்கூட்டியே ஒரு தவணையை சேர்த்து, மத்திய அரசு நேற்று விடுவித்தது. ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 280 கோடி விடுவித்தது. இதன்மூலம், மாநிலங்களுக்கு இரட்டிப்பு தொகை கிடைத்துள்ளது.

    மாநிலங்கள் தங்களது மூலதன செலவுகளை விரைவுபடுத்தவும், வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு திட்டங்களின் நிதித்தேவைக்காகவும், முன்னுரிமை திட்டங்களின் நிதி ஆதாரத்துக்காகவும் இதுபோன்று முன்கூட்டியே ஒரு தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.4 ஆயிரத்து 825 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

    மாநில வாரியாக விடுவிக்கப்பட்ட வரிபங்கீடு வருமாறு:-

    ஆந்திரா-ரூ.4,787 கோடி. அருணாசலபிரதேசம்-ரூ.2,078 கோடி. அசாம்-ரூ.3,700 கோடி. பீகார்-ரூ.11,897 கோடி. சத்தீஸ்கர்-ரூ.4,030 கோடி. கோவா-ரூ.457 கோடி. குஜராத்-ரூ.4,114 கோடி. அரியானா-1,293 கோடி. இமாசலபிரதேசம்-ரூ.982 கோடி. ஜார்கண்ட்-ரூ.3,912 கோடி. கர்நாடகா-ரூ.4,314 கோடி.

    கேரளா-ரூ.2,277 கோடி. மத்தியபிரதேசம்-ரூ.9,285 கோடி. மகாராஷ்டிரா-ரூ.7,472 கோடி. மணிப்பூர்-ரூ.847 கோடி. மேகாலயா-ரூ.907 கோடி. மிசோரம்-ரூ.591 கோடி. நாகாலாந்து-ரூ.673 கோடி.

    ஒடிசா-ரூ.5,356 கோடி. பஞ்சாப்-ரூ.2,137 கோடி. ராஜஸ்தான்-ரூ.7,128 கோடி. சிக்கிம்-ரூ.459 கோடி. தெலுங்கானா-ரூ.2,486 கோடி. திரிபுரா-ரூ.837 கோடி. உத்தரபிரதேசம்-ரூ.1,322 கோடி. மேற்கு வங்காளம்-ரூ.8,898 கோடி.

    • தமிழக வணிக வரித்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
    • வரி ஏய்ப்பு பெருமளவு தடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 1, 2 என இரண்டு வணிக வரி மாவட்டங்கள் உள்ளன. 9 சரகங்களுடன் வணிக வரி மாவட்டம் 1ம், 7 சரகங்களுடன் வணிக வரி மாவட்டம் 2-ம் இயங்குகின்றன.கோவை கோட்டத்தில் இருந்த திருப்பூர் வணிக வரி மாவட்டம் துறை சார் மறு சீரமைப்பின்போது ஈரோடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டது.

    திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகளான தாராபுரமும், காங்கயமும், கரூர் வணிக வரி மாவட்டத்திலும், அவிநாசி, கோவை வணிக வரி மாவட்டத்திலும், உடுமலை சரகம், பொள்ளாச்சி வணிக வரி மாவட்டத்திலும் தொடர்கின்றன.இதனால், திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள்கோ வை, ஈரோடு, கரூர் என 3 வெவ்வேறு மாவட்டங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. பின்னலாடை துறையினர், ஆடிட்டர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து வருவாய் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி திருப்பூர் வணிக வரி கோட்டம் அமைக்கப்படும் என தமிழக வணிக வரித்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    தற்போது குமரன் ரோட்டில் திருப்பூர் வணிக வரி மாவட்டம் 1க்கான துணை கமிஷனர் அலுவலகம்,குமார் நகரில் வணிக வரி மாவட்டம் 2க்கான துணை கமிஷனர் அலுவலகங்கள் இயங்குகின்றன.வணிக வரி கோட்ட அலுவலகம் இயங்குவதற்காக வாடகை கட்டடம் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வணிக வரி கோட்டம் அமையும்போது நிர்வாகம் மற்றும் அமலாக்க இணை கமிஷனர்கள் நியமிக்கப்படுவர்.

    வாகன தணிக்கை, நிறுவனங்களின் அதிரடி சோதனைகள் செய்து, போலி பில், பில் இல்லாமல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிடமிருந்து ஏய்ப்பு வரியை வசூலிப்பது அமலாக்க பிரிவின் முக்கிய பணி. இதற்காக அந்த பிரிவு அதிகாரிகளுக்கு வாகனங்கள் வழங்கப்படுகின்றன.அமலாக்க பிரிவுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதை உறுதிப்படுத்தும்வகையில் அமலாக்க பிரிவினரின் பயன்பாட்டுக்காக 6 புதிய பறக்கும் படை வாகனங்கள் திருப்பூருக்கு வந்துள்ளன. அந்த வாகனங்கள் குமார் நகரில் உள்ள வணிக வரி மாவட்டம் 2, துணை கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கோவை, ஈரோடு மாவட்ட அமலாக்க அதிகாரிகளே திருப்பூருக்கு வந்து வாகன தணிக்கைகளில் ஈடுபடுகின்றனர். திருப்பூரிலேயே அமலாக்க பிரிவு அமைவதன்மூலம், வாகன தணிக்கை வேகம் பெறும். வரி ஏய்ப்பு பெருமளவு தடுக்கப்படும். அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

    ×