என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Southern States"
- கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் சார்பில் போராட்டம் நடந்துள்ளன.
- தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்.
மத்திய அரசின் ஜி.எஸ்டி. வசூலில் மாநிலங்களுக்கு வழங்கும் வருவாய் பகிர்வில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தநிலையில், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் சார்பில் போராட்டம் நடந்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து)- ரூ.22,26,983.39 கோடி., அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி - ரூ.3,41,817.60 கோடி.
கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப் பகிர்வுத் தொகை - ரூ.6,42,295.05 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் விடுவிக்கப்பட்ட வரிப் பகிர்வுத் தொகை - சுமார் ரூ.6,91,375.12 லட்சம் கோடி.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு புள்ளி விவரங்களுடன் பதில் அளித்து உள்ளது.
அதில் மாநிலங்கள் கொடுத்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திருப்பி அனுப்பிய தொகை வருமாறு:-
தமிழ்நாடு - 26 பைசா
கர்நாடகா - 16 பைசா
தெலுங்கானா - 40 பைசா
கேரளா - 62 பைசா
மத்தியபிரதேசம் - ரூ.1.70
உத்தரப்பிரதேசம் -ரூ. 2.2
ராஜஸ்தான் - ரூ.1.14
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாரபட்சம் காட்டினால் தனி நாடு கேட்கும் சூழல் உருவாகும் என்றார் டிகே சுரேஷ்
- 4 வருடங்களில் ரூ.45,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்மானத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவதாக பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும், எதிர்கட்சிகளின் தலைவர்களும், எதிர்கட்சிகளின் கூட்டணி தலைவர்களும் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், கர்நாடக மாநிலம் பெங்களூரூ (ரூரல்) பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ், "நிதி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டினால், தென் மாநிலங்கள் தனி நாடு கேட்கும் சூழ்நிலை உருவாகும்" என பேசியிருந்தார்.
தொடர்ந்து, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா, "கர்நாடக மாநில மக்கள் செலுத்தும் வரி, அவர்களுக்கு அவசியமான நேரத்தில் வழங்கப்படாமல், வட மாநிலங்களுக்கு செல்கிறது. மாநிலத்திற்கு வழங்க வேண்டிய வரி வருவாயை மத்திய அரசு குறைத்துள்ளதால், கடந்த 4 வருடங்களில் சுமார் ரூ.45,000 கோடி கர்நாடகாவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது" என கூறினார்.
இப்பின்னணியில், முதல்வர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பசவராஜ் ராயரெட்டி, "மத்திய அரசிடம் இருந்து தென் மாநிலங்களுக்கு நிதி பகிர்மானம் முறையாக பெற உதவும் வகையில் ஒரு பொருளாதார மன்றத்தை (economic alliance) உருவாக்கும் திட்டம் உள்ளது. இந்த அமைப்பு கூட்டாட்சி தத்துவத்தை சார்ந்து உருவாக்கப்படும். தென் மாநிலங்களுக்கு, அவற்றின் சரியான உரிமையை பெறுவதற்கும், தென் மாநிலங்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் ஒரு தளமாக செயல்படுவதற்கும் இந்த அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும்" என கூறினார்.
பிப்ரவரி 7 அன்று புது டெல்லியில், இப்பிரச்சனைக்காக கர்நாடக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மத்திய அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளனர்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது அங்கு சாமி தரிசனத்திற்கு செல்ல முயன்ற இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் விரட்டி அடித்தனர். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டு சபரிமலையில் பதட்டமான சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்பட உள்ளது. மறுநாள் 17-ந்தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 27- ந் தேதி மண்டல பூஜையும், 2019 ஜனவரி 14- ந் தேதி மகரவிளக்கு நடக்கிறது.
மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களிலும் சபரிமலைக்கு திரளான பெண் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த காலங்களில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலைக்கு வருவார்கள்.
இதையொட்டி 5 தென் மாநிலங்களை சேர்ந்த அறநிலையத் துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தென் மாநில அறநிலையத்துறை மந்திரிகள் யாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பினராயி விஜயனும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
மண்டல மகர விளக்கு சீசனை முன்னிட்டு சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி உட்பட அனைத்து இடங்களிலும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் நவம்பர் 11- ந் தேதிக்கு முன்னதாக சீரமைக்கப்படும்.
மற்ற மாநில அரசுகளின் உதவியுடன் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பெண் போலீசாரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து தனியார் வாகனங்களும் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். நிலக்கல்லில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்கப்படும்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார், கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா, ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாம், தமிழ்நாடு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலைய துறை கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வா வர்மா, தமிழ்நாடு அறநிலையத்துறை இணை ஆணையர் அன்பு மணி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி உண்ணிகிருஷ்ணன்.
ஆந்திரா அறநிலையத் துறை தலைமை அதிகாரி சுப்பாராவ், தெலுங்கானா அறநிலையத்துறை இணை ஆணையர் கிருஷ்ண வேணி, புதுச்சேரி அறநிலைய துறை ஆணையர் தில்லைவேல், கர்நாடகாவை சேர்ந்த பிரதீப் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். #Sabarimala #SabarimalaTemple
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்