search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிக வளாகம்"

    • ரூ.1.14 கோடியில் வணிக வளாகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
    • 24 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்றார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.1.14 கோடி மதிப்பில் தினசரி சந்தைக்கான புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார்.

    மாநகராட்சிகள், நக ராட்சிகள், பேரூராட்சிகளில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 24 கடை களுடன் கூடிய தினசரி சந்தைக்கான வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக சர்க்கரை குளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதுகுறித்து நகராட்சி தலைவர் தங்கம் ரவி கண்ணன் கூறுகையில், நகராட்சியில் வரியற்ற வருவாயை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் நெரிசலை குறைக்கும் வகையில் தினசரி சந்தை அமைப்பதற்காக 24 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்றார்.

    அடிக்கல் நாட்டு விழாவில் நகராட்சி பொறி யாளர் தங்கப்பாண்டியன், ஒப்பந்ததாரர் குழந்தைவேலு, கவுன்சிலர் மீரா தனலட்சுமி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் மிளகாய் வணிக வளாகம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கூடுதல் வணிக வளாக கடைகள் மற்றும் குளிர்சாதன கிட்டங்கிகள் விரிவாக்கம் செய்யப்படும்.

    ராமநாதபுரம்

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், எட்டிவயல் கிராமத்தில் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு ரூ.13 கோடி செலவில் 65 வணிக கடைகள் கட்டப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி பேசும்போது கூறியதாவது:-

    மிளகாய் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 65 வணிக கடைகள் மூலம் மாவட்டத்தில் உள்ள குண்டு மிளகாய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயனடைவார்கள்.ஏற்கனவே இந்த வளாகத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மிளகாய் குளிர்பதன கிட்டங்கி செயல்பட்டுவருகிறது. மிளகாய் குளிர் பதன கிட்டங்கி மற்றும் புதிதாக திறக்கப்பட்டுள்ள வணிக வளாக கடைகள் ஆகிய 2-ம் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும் படிப்படியாக இந்த வளாகத்தில் கூடுதல் வணிக வளாக கடைகள் மற்றும் குளிர்சாதன கிட்டங்கிகள் விரிவாக்கம் செய்யப்படும்.

    வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் உபரி நீர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நிரப்பப்பட்டு நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலாளர் ராஜா, வேளாண்மை விற்பனை குழு துணை இயக்குநர் மூர்த்தி, மாநில வேளாண்மை விற்பனை வாரிய உதவி செயற்பொறியாளர் நாகரத்தினம், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சத்திய குணசேகரன், பரமக்குடி வட்டாட்சியர் தமீம் அன்சாரி, எட்டிவயல் ஊராட்சி தலைவர் கனகசக்தி பாஸ்கரன், மிளகாய் வத்தல் வணிகர் சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டிட கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டும் பணிவிரைந்து நடைபெற்று வருகிறது.
    • கூடியவிரைவில் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த பஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் கடந்த 10 வருடங்களுக்கு முன் அவினாசி கைகாட்டிபுதூர் அருகே புதியபஸ் நிலையம் அமைக்கப்பட்டு பழைய பஸ் நிலைய கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. நீண்டகாலமாக பழைய பஸ் நிலைய இடம் பயன்பாடின்றி கிடந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அந்த இடத்தில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் இரண்டு தளங்களுடன் புதிய வணிக வளாகம் அமைப்பதற்காக 2 மாதம் முன்பு பூமிபூஜை நடந்தது. இதையடுத்து கட்டிட கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டும் பணிவிரைந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கி தொடர்ந்து பணி நடைபெற உள்ளது. கூடியவிரைவில் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றனர்.

    • செட்டிகுளத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் வணிக வளாக கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.
    • புதிய கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

    மதுரை

    மதுரை அருகே செட்டிக்குளத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ரூர்பன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வணிகவளாக கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.

    கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் சரவணன் முன்னிலைய வகித்தார். புதிய கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். ெதாடர்ந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்களை வழங்கினார். ரூ.14.59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையையும் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீரராகவன், மண்டலம் சசிகுமார், ஊராட்சி தலைவர் பூங்கோதை மலைவீரன், மகளிர் திட்ட அலுவலர் காளிதாஸ் கூட்டுறவு இணைப்பதிவாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமருகலில் புதிதாக கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் வணிக வளாகத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    திருமருகல்:

    நாகை மாவட்டம் திருமருகலில் சந்தைப்பேட்டை சாலையில் அரசு சார்பில் சுமார் ரூ.15 லட்சம் செலவில் 5 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தை சீர்செய்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து கடந்த ஆண்டு ‘தினத்தந்தி‘ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து கட்டிடத்துக்கு உடனடியாக வர்ணம் பூசப்பட்டது. அப்போது இந்த 5 கடைகளில் 4 கடைகளை மட்டும் வாடகைக்கு விட திருமருகல் ஒன்றிய ஆணையர் ஏல அறிவிப்பும் செய்திருந்தார். ஆனால், ஏதோ காரணங்களால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

    மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக வணிக வளாகம் பூட்டியே கிடப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகள் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படும் என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே புதிதாக கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பயன்பாடற்று பூட்டியே கிடக்கும் இந்த அரசு வணிக வளாகத்தை உடனே திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    ஈரோடு மாநகராட்சி கனி மார்க்கெட்டில் ரூ.100 கோடி மதிப்பில் வணிக வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ.தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழக சட்டசபையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.தென்னரசு தொழில்துறை, ஊரக தொழில்துறை மானியக் கோரிக்கைகள் மீதான உரையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-

    இந்தியாவில் தமிழகம் தொழில் துறையில் 3-வது இடத்தில் உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9,10-ந் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடத்தி அதில் வெற்றி கண்டவர் ஜெயலலிதா.

    ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜனவரி மாதம் 23, 34-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளார். இந்தியாவிலேயே தொழில் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வமும் முயற்சிகளை எடுத்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    ஈரோடு மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தி கொடுத்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஈரோடு மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் செய்து கொடுத்துள்ளார்.

    550 கோடி ரூபாய் மதிப்பில் ஊராட்சி கோட்ட குடிநீர் திட்டம், ரூ.64 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம், ரூ.130 கோடியில் 1,520 அடுக்குமாடி குடியிருப்புகள்.

    ரூ.43 கோடியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், ரூ.300 கோடியில் பெருந்துறை சாலையில் உயர்மட்ட மேம்பாலம். ரூ.18 கோடியில் புறவழிச்சாலை அமைக்கின்ற திட்டம் ஆகியவற்றை கொடுத்தற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சில கோரிக்கைகளையும் சட்டசபையில் பதிவு செய்து கொள்கிறேன். ஈரோட்டுக்கு ஒரு அரசு மகளிர் கல்லூரி வழங்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன்.

    அதே போன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சி கனி மார்க்கெட்டில் ரூ.100 கோடி மதிப்பில் வணிக வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும்.

    ஈரோடு-சத்தி சாலையை நான்கு வழிச்சாலையாகயும், பவானி சாலையை நான்கு வழிச்சாலையாகவும் மாற்றி கொடுக்க வேண்டும். அதே போல் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டை ரூ.100 கோடி மதிப்பில் அடுக்குமாடி மார்க்கெட்டாகவும், ஈரோடு முனிசிபல் சத்திரத்திலுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அங்கேயே அடுக்குமாடி குடியிருப்புகளும், ஈரோடு சி.என்.சி.கல்லூரியை அரசு கல்லூரியாகவும், ஈரோடு நடராஜா தியேட்டர் பகுதியிலுள்ள மரப்பாலம், குய்வன் திட்டு பகுதியில் உள்ள 396 அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளதால் இங்கு புதிய குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×