search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி பஸ் நிலையத்தில்  வணிக வளாகம் கட்டும் பணி தொடக்கம்
    X
    வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியதை படத்தில் காணலாம். 

    அவினாசி பஸ் நிலையத்தில் வணிக வளாகம் கட்டும் பணி தொடக்கம்

    • கட்டிட கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டும் பணிவிரைந்து நடைபெற்று வருகிறது.
    • கூடியவிரைவில் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த பஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் கடந்த 10 வருடங்களுக்கு முன் அவினாசி கைகாட்டிபுதூர் அருகே புதியபஸ் நிலையம் அமைக்கப்பட்டு பழைய பஸ் நிலைய கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. நீண்டகாலமாக பழைய பஸ் நிலைய இடம் பயன்பாடின்றி கிடந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அந்த இடத்தில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் இரண்டு தளங்களுடன் புதிய வணிக வளாகம் அமைப்பதற்காக 2 மாதம் முன்பு பூமிபூஜை நடந்தது. இதையடுத்து கட்டிட கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டும் பணிவிரைந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கி தொடர்ந்து பணி நடைபெற உள்ளது. கூடியவிரைவில் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றனர்.

    Next Story
    ×