search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிக வளாகம்"

    • இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு நிபுணர்களும் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் மோப்ப நாய்கள் மூலம் வணிக வளாகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த மாதம் சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கட்டிடத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
    • சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவின் ஜியாங்சி மாகாணம் யுஷூயி நகரில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. நேற்று இந்த வணிக வளாகம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

    தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஏரளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.24 மணிக்கு வணிக வளாகத்தில் திடீரென தீப்பிடித்தது.

    கட்டிடத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வணிக வளாகத்தின் ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வணிக வளாகத்தை விட்டு வெளியே ஓடினர். இருப்பினும் தீப்பற்றிய பகுதிகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.

    இதனிடையே தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முராக ஈடுபட்ட நிலையில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் வணிக வளாகத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

    இருப்பினும் இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 39 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது.
    • ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் கிழக்கு கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலின் ராஜகோபுரமாக உள்ள கிழக்கு கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    அதேவேளையில், கூட்ட நெரிசலால் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் கிழக்கு கோபுரத்தை தரிசனம் செய்கின்றனா்.இந்நிலையில், கோவிலின் கிழக்கு கோபுரத்தை 30 அடி உயரத்துக்கு மறைத்து வணிக வளாகம் கட்டினால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, பக்தா்களின் வசதிக்காகவும், கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சுரண்டை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.
    • சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூட்டுறவு பண்டகசாலை பொருட்கள் பாதுகாப்பு குடோன் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சிக் குட்பட்ட சங்கரன்கோவில் ரோட்டில் அமைந்துள்ள தாட்கோ வணிக வளாகம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    பொது மக்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படும் முன் அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சுரண்டை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.

    அதைத்தொடர்ந்து சுரண்டைக்கு வந்த தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளர் ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., சுரண்டை சேர்மன் வள்ளிமுருகன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் (பொறுப்பு) ஆகியோர் தாட்கோ வணிக வளாக கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து பங்களா சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூட்டுறவு பண்டகசாலை பொருட்கள் பாதுகாப்பு குடோன் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது சுரண்டை நகராட்சி பொறி யாளர் முகைதீன், பணி மேற்பார்வையாளர் வினோத் கண்ணன், கவுன்சிலர் வேல்முத்து, மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், சுரண்டை நகர தி.மு.க. அவைத்தலைவர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சுரண்டை வார்டு செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், மாணவர் அணி ரமேஷ், சுந்தரபாண்டியபுரம் பேரூர் முன்னாள் செய லாளர் மாரியப்பன், டான் கணேசன், ராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கி ரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு செய்தார்.
    • 22-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சி 19-வது வார்டு பகுதியான மார்க்கெட் பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு செய்தார். பிறகு சர்ச் வீதியில் அடிப்படை வசதிகள் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த அவர் கூறுகையில், தாராபுரம் மார்க்கெட் பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் தொடங்கப்பட்டு பணிகள் வெகு விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் முழு முயற்சியுடன் செயல்பட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    அதே போன்று தாராபுரம் நகராட்சி 22-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.டி.நாகராஜ், 19-வது வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல், நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பாலு, நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.  

    • அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுவதற்கும், ஆற்காடு பழைய பஸ் நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிக்கும் என மொத்தமாக ரூ.9.48 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    ஆற்காடு எம்.எல்.ஏ.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியும், கட்டிட, பணிகளை தரமாக மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியா ளரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    இதில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனலட்சுமி, நகரமன்றத் துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணாராம், நகராட்சி பொறியாளர் எழிலரசன், நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்
    • லிப்ட்டுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில், செப்.1-

    நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் 5 மாடி வணிகவளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வங்கி, கம்ப்யூட்டர் சென்டர், இன்சூரன்ஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு ஏராளமான பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் வணிக வளாகத்தில் உள்ள லிப்ட்டை பயன்படுத்துவது வழக்கம். இன்று காலையில் வேலைக்கு வந்த பணியாளர்கள் லிப்ட்டை பயன்படுத்தினார்கள். அதன்பிறகு லிப்ட் ஊழியர் ஜான்சன் (வயது 60) என்பவர் மேல் மாடி யிலிருந்து தரைதளத்திற்கு லிப்ட்டில் வந்து கொண்டி ருந்தார். அப்போது முதல் தளத்திற்கும், தரைத்தளத்திற்கும் இடை யில் வந்தபோது லிப்ட் பாதியில் நின்றது. இதையடுத்து அவர் தொடர்ந்து லிப்ட் இயக்க முயன்றார்.

    ஆனால் லிப்ட்டை இயக்க முடியவில்லை. இதையடுத்து லிப்ட் பழுதானது குறித்து ஆப்ரேட்டர் ஜான்சன் மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லிப்ட்டில் சிக்கி இருந்த ஜான்சனை மீட்கும்பணியில் ஈடுபட்டனர். 5-வது மாடிக்கு சென்று லிப்ட்டை தரை தளத்திற்கு கொண்டு வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

    சுமார் 45 நிமிடம் போராடி லிப்ட் தரை தளத்திற்கு கொண்டு வந்த னர். பின்னர் லிப்ட்டின் கம்பிகளை வெட்டி அங்கிருந்த ஜான்சனை மீட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஜான்சன் மீட்கப்பட்டார். ஜான்சன் லிப்ட் ஆப்ரேட்டர் என்பதால் அவர் எந்த ஒரு தயக்கமும் இன்றி இருந்தார். இருப்பினும் மீட்கப்பட்ட ஜான்சனுக்கு முதல் உதவி சிகிச்சைகளை அளித்தனர். ஏற்கனவே இந்த வணிக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு லிப்ட் ஒன்று பழுதாகி அதில் சிக்கிய பொதுமக்கள் மீட்கப்பட்ட னர் என்பது குறிப்பிடத்தக்க தாகும். மேலும் நாகர்கோ வில் நகரில் கடந்த சில நாட்களாகவே திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் உள்ள லிப்ட்டுகளில் பொதுமக்கள் சிக்கி மீட்கப்படும் சம்ப வங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. எனவே வணிக வளாகம் மற்றும் திருமண மண்டபங்களில் உள்ள லிப்ட்டுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

    • வளாகம் ஒன்றினை உருவாக்கிட தமிழக அரசின் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முயற்சிப்பதாக தெரிய வருகின்றது.
    • அதனை நம்பியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக் கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆசியாவிலேயே பெரிய வணிக வளாகமான 85 ஏக்கர் பரப்பளவுள்ள கோயம்பேடு வணிக வளாகத்தை திருமழிசைக்கு மாற்றுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மம் ஆலோசித்து வருவதாக தெரிய வருகின்றது.

    85 ஏக்கர் பரப்பளவுள்ள கோயம்பேடு வணிக வளாகத்தில், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள், மால் கள், ஸ்டார் ஹோட்டல்கள், போன்ற பல்வேறு வகை மேம்படுத்தப்பட்ட வளாகம் ஒன்றினை உருவாக்கிட தமிழக அரசின் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முயற்சிப்பதாக தெரிய வருகின்றது.

    பல்வேறு வகைகளில் தங்களின் வாழ்வாதாரத்தை முதலீடு செய்து வணிகம் செய்து வரும் கோயம்பேடு மார்க்கெட் வணிகர்கள், மீண்டும் ஒரு மாற்றத்தைத் தேடி அலையும் இக்கட்டான சூழ்நிலையை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மம் கவனத்தில் கொண்டு, அதனை தடுத்து நிறுத்தி கோயம்பேடு வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடவும், அதனை நம்பியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அண்ணா வணிக வளாகம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.
    • கீழ்தளத்தில் 17 கடைகளும், மேல் தளத்தில் 26 கடைகளும் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி மார்க்கெட் அருகில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் பேரறிஞர் அண்ணா வணிக வளாகம் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் இன்று அண்ணா வணிக வளாகத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    அண்ணா வணிக வளாகம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இங்கு கீழ் தளம் ,மேல் தளம் உள்ளது. தலா 9432 சதுர அடி பரப்பளவில் கீழ்த்தளம், மேல் தளம் அமைந்துள்ளன. கீழ்தளத்தில் 17 கடைகளும், மேல் தளத்தில் 26 கடைகளும் உள்ளது.

    இந்த கடைகள் அனைத்தும் விரைவில் ஏலம் விடப்படுகின்றன.

    இதைத் தவிர கழிப்பறை வசதிகள், சி.சி.டி.வி கேமராக்கள் உள்பட பல்வேறு வசதிகள் இந்த வளாகத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் அஞ்சுகம்பூபதி, உதவி பொறியாளர் ஆனந்தி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர்கள் கார்த்திகேயன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தியேட்டர் வசதியுடன் வணிக வளாகம் கட்டப்படுகிறது
    • 28 பஸ்கள் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், அண்ணா பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் உள்ளது. தற்பொழுது இந்த 3 பஸ் நிலையங்களையும் சீரமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் நவீன பஸ்நிலையம் அமைக்க ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து புதிதாக பஸ் நிலையம் அமைப்ப தற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி மேயர் மகேஷ் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நவீன பஸ் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். பஸ் நிலையத்தை பொறுத்தமட்டில் 4 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. 28 பஸ்கள் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பஸ்நிலையத்தின் மையப்பகுதியில் நான்கு மாடியில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. வணிக வளாகத்தில் தியேட்டர் அமைக்கலாமா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மாநகராட்சி சார்பில் தியேட்டர் அமைக் கப்படும்போது பொதுமக்க ளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது அனை வரின் கருத்தாக உள்ளது. எனவே வெளியூர்களுக்கு இணையாக நாகர்கோவில் மாநகர பகுதியில் அமையும் வணிக வளாகத்திலும் தியேட்டர் அமைக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது.

    இது மட்டும் இன்றி வணிக வளாகத்தில் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் கடைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகத்தை குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். புதிய பஸ் நிலையம் அமையும் போது பொதுமக்களுக்கு மிகவும் பய னுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

    • இடத்தை மேயர் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு
    • முக்கடல் அணையில் இருந்துவரும் தண்ணீரை தேக்கிவைப்பதற்கான நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் நாகர்கோவில் மாநக ராட்சிக்கு சொந்த மான இடத்தில் விருந்தினர் மாளிகை மற்றும் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இடத்தை மேயர் மகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி பேரூராட்சியில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான 40 சென்ட் நிலம் உள்ளது. இதில் கன்னியாகுமரி நகரபகுதி மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்துவரும் தண்ணீரை தேக்கிவைப்ப தற்கான தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. மீதி உள்ள காலி மனை இடத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் விருந்தினர் மாளிகை மற்றும் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து இந்த இடத்தினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது நாகர்கோ வில் மாநகராட்சி ஆணையாளர் அனந்த்மோகன், கன்னி யாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன், அகஸ்தீஸ்வ ரம் ஒன்றிய தி.மு.க செய லாளர் பாபு, கன்னி யாகுமரி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பூலோகராஜா, லிங்கேஸ்வரி, தி.மு.க.நிர்வாகிகள் ஆனந்த், பிரேம்ஆனந்த், பொன் ஜாண்சன், நிசார், பிரைட்ட ன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ×